பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண்ணைப்போன்றிருக்கும் லட்சுமிமேனனின் யதார்த்தமான நடிப்பு, அவருக்கு அரை டஜன் படங்களை பெற்றுத்தந்திருக்கிறது. அதனால் விளையாட்டாக நடிக்க வந்தவர், இப்போது பிசியான நடிகையாகி விட்டார்.
கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என்று நடித்து வெளியான எல்லா படங்களுமே ஹிட் என்பதால், ராசியான கதாநாயகி பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார் லட்சுமிமேனன்.
இந்த நிலையில், தனது ஹிட் படங்களின் ஹீரோக்களில் சசிகுமாருடன் இரண்டு படங்களில் நடித்த லட்சுமிமேனன், அடுத்தபடியாக அவர் நடித்து வரும் பிரம்மன் படத்திலும் தனக்கு சான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர், அதற்கான முயற்சியும் செய்து வந்தார்.
ஆனால், சூழ்நிலைகள் லட்சுமிமேனனுக்கு சாதகமாக இருந்துவந்தபோதும், கடைசி நேரத்தில் ஆந்திராவில் இருந்து வந்த லாவண்யா திரிபாதி என்ற நடிகை அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டார். இவர் தெலுங்கில் அந்தால் ராட்சஷி என்ற படத்தில் நடித்தவராம்.
இதனால் எதிர்பார்ப்புடன் இருந்த லட்சுமிமேனனுக்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டதாம். ஆனபோதும், கைவசம் பல படங்கள் இருப்பதால், மனதை தேற்றிக்கொண்ட லட்சுமிமேனன், பாண்டியநாடு படத்தையடுத்து மீண்டும் விஷாலுடன் நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிப்பது போன்று, ஜிகர்தண்டாவில் நடித்த சித்தார்த்துடனும், மஞ்சப்பையில் நடித்து வரும் விமலுடனும் அடுத்தடுத்து புதிய படங்களில் ஜோடி சேர தீவிர முயற்சி எடுத்து வருகிறாராம்.
தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி மாதிரி யாராவது புதிய வரவு நடிகைகள் தனக்கான வாய்ப்புகளை தட்டிப்பறித்து விடக்கூடாது என்பதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும இறங்கியிருக்கிறாராம் லட்சுமிமேனன்.
கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என்று நடித்து வெளியான எல்லா படங்களுமே ஹிட் என்பதால், ராசியான கதாநாயகி பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார் லட்சுமிமேனன்.
இந்த நிலையில், தனது ஹிட் படங்களின் ஹீரோக்களில் சசிகுமாருடன் இரண்டு படங்களில் நடித்த லட்சுமிமேனன், அடுத்தபடியாக அவர் நடித்து வரும் பிரம்மன் படத்திலும் தனக்கு சான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர், அதற்கான முயற்சியும் செய்து வந்தார்.
ஆனால், சூழ்நிலைகள் லட்சுமிமேனனுக்கு சாதகமாக இருந்துவந்தபோதும், கடைசி நேரத்தில் ஆந்திராவில் இருந்து வந்த லாவண்யா திரிபாதி என்ற நடிகை அந்த வாய்ப்பை கைப்பற்றி விட்டார். இவர் தெலுங்கில் அந்தால் ராட்சஷி என்ற படத்தில் நடித்தவராம்.
இதனால் எதிர்பார்ப்புடன் இருந்த லட்சுமிமேனனுக்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டதாம். ஆனபோதும், கைவசம் பல படங்கள் இருப்பதால், மனதை தேற்றிக்கொண்ட லட்சுமிமேனன், பாண்டியநாடு படத்தையடுத்து மீண்டும் விஷாலுடன் நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிப்பது போன்று, ஜிகர்தண்டாவில் நடித்த சித்தார்த்துடனும், மஞ்சப்பையில் நடித்து வரும் விமலுடனும் அடுத்தடுத்து புதிய படங்களில் ஜோடி சேர தீவிர முயற்சி எடுத்து வருகிறாராம்.
தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி மாதிரி யாராவது புதிய வரவு நடிகைகள் தனக்கான வாய்ப்புகளை தட்டிப்பறித்து விடக்கூடாது என்பதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும இறங்கியிருக்கிறாராம் லட்சுமிமேனன்.