RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

இச்சையான பார்வைகளுக்கு மத்தியில் கூச்சமே இல்லாமல் என்னால் நடனமாட முடியாது! - நித்யாமேனன்

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 2:23 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சினிமாவுக்கு வரும் நடிகைகள் கலைச்சேவை ஆற்ற வருகிறேன் என்று சொல்லிக்கொண்டாலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். அதனால்தான் ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் கண்ணியமாக நடிப்பவர்கள், பின்னர் எதிர்பார்த்தபடி சம்பளம் கிடைக்கவில்லை என்றதும், கவர்ச்சிக்கு மாறி கரன்சிகளை கறக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

இப்படி மாறும் நடிகைகள், ஒவ்வொரு புத்தாண்டுகளுக்கும் ஸ்டார் ஹோட்டல்களில் விடிய விடிய நடனமாடியும் சம்பாதிக்கிறார்கள். அதற்காக இந்தியா மட்டுமின்றி துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் செல்கிறார்கள். ஒரு இரவு முழுக்க நடனமாடி பல கோடிகளை வாங்குகிறார்கள். அப்படி கடந்த புத்தாண்டு தினத்தின்போது பெரும்பாலான பாலிவுட் நடிகைகளும், தெலுங்கு நடிகைகளும் செம பிஸியாக இருந்தனர்.

இந்நிலையில், நித்யாமேனனையும் நடனமாட அழைத்தார்களாம். அதற்கு அவர் மறுத்து விட்டாராம். சினிமாவிலேயே ஒரு வட்டம் போட்டுதான் நடித்து வருகிறேன். அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் எல்லை மீறியதில்லை. குறைவான சம்பளம் என்றாலும், மனதுக்கு பிடித்தமான வேடங்களில் நடிப்பதையே விரும்புகிறேன்.

அதனால்தான் ஹோட்டல்களில் நடனமாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. மது போதையுடன் ஒரு பெருங்கூட்டமே அமர்ந்திருக்க அவர்களின் இச்சையான பார்வைகளுக்கு மத்தியில் கூச்சமே இல்லாமல் கிளாமர் உடையணிந்து ஆட என்னால் முடியாது. அதனால்தான் கோடிகளை கொட்டிக்கொடுக்கிறேன் என்று பலர் வற்புறுத்தியும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் நடனமாட மறுத்து விட்டேன் என்கிறார் நித்யாமேனன்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT