நியூயார்க்: டில்லியில், சீக்கியர்களுக்கு எதிராக நடந்த, கலவரத்தில் ஈடுபட்ட தலைவர்களை பாதுகாப்பதாக கூறி, தன் மீது தொடரப்பட்ட வழக்கை, டிஸ்மிஸ் செய்யும் படி, நியூயார்க் நீதிமன்றத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா, மனு செய்துள்ளார்.
டில்லியில், 84ல், முன்னாள் பிரதமர், இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. இதில், நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நீதி கிடைக்க வழி செய்யும் படி, அமெரிக்காவில் உள்ள சீக்கிய உரிமை அமைப்பு போராடி வருகிறது. இந்திய தலைவர்கள் சிலருக்கு, எதிராக, இந்த அமைப்பு, அமெரிக்காவின், நியூயார்க், நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா, மருத்துவ சிகிச்சைக்காக, கடந்த ஆண்டு, செப்டம்பரில், நியூயார்க் சென்றார். சீக்கிய உரிமை அமைப்பினர், சோனியா மீதும், நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். "கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு, சோனியா பாதுகாப்பு அளித்து வருகிறார்; இதற்காக, சோனியா தண்டிக்கப்பட வேண்டும்; கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் இழப்பீடு தர வேண்டும்' என, இந்த அமைப்பு, மனுவில் தெரிவித்திருந்தது. இதையடுத்து, நியூயார்க் நீதிமன்றம், சோனியாவுக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மன், தொடர்பாக, வரும், 23ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும் படி, நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, சோனியாவின் சார்பில், வழக்கறிஞர், ரவி பத்ரா, நீதிமன்றத்தில் விளக்கங்களை சமர்பித்தார். சோனியா மீதான இந்த வழக்கை, டிஸ்மிஸ் செய்யும் படி, மனுவில் கோரப்பட்டுள்ளது.
டில்லியில், 84ல், முன்னாள் பிரதமர், இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. இதில், நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நீதி கிடைக்க வழி செய்யும் படி, அமெரிக்காவில் உள்ள சீக்கிய உரிமை அமைப்பு போராடி வருகிறது. இந்திய தலைவர்கள் சிலருக்கு, எதிராக, இந்த அமைப்பு, அமெரிக்காவின், நியூயார்க், நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா, மருத்துவ சிகிச்சைக்காக, கடந்த ஆண்டு, செப்டம்பரில், நியூயார்க் சென்றார். சீக்கிய உரிமை அமைப்பினர், சோனியா மீதும், நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். "கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு, சோனியா பாதுகாப்பு அளித்து வருகிறார்; இதற்காக, சோனியா தண்டிக்கப்பட வேண்டும்; கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் இழப்பீடு தர வேண்டும்' என, இந்த அமைப்பு, மனுவில் தெரிவித்திருந்தது. இதையடுத்து, நியூயார்க் நீதிமன்றம், சோனியாவுக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மன், தொடர்பாக, வரும், 23ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும் படி, நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, சோனியாவின் சார்பில், வழக்கறிஞர், ரவி பத்ரா, நீதிமன்றத்தில் விளக்கங்களை சமர்பித்தார். சோனியா மீதான இந்த வழக்கை, டிஸ்மிஸ் செய்யும் படி, மனுவில் கோரப்பட்டுள்ளது.