கச்சிராயபாளையம்: சேராப்பட்டு மலைவாழ் மாணவர் விடுதி வளாகத்தில் உள்ள, வெள்ளை நிற காகத்தை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, கல்வராயன் மலை, சேராப்பட்டு கிராமத்தில், கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது. இந்த வளாகத்தில், மாணவ, மாணவியர் விடுதி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மரங்களில், காகங்கள் கூடு கட்டி வாழ்கின்றன; ஒரு கூட்டில் இருந்த, காக்கை குஞ்சு வெள்ளை நிறத்தில் இருந்ததால், மற்ற காகங்கள், அதை விரட்டின. இதனால், வெள்ளை நிற காகம், அங்குள்ள வேப்ப மரத்தில் தனியே கூடு கட்டி வாழ்கிறது. இதையறிந்த, அப்பகுதி மக்கள், ஆர்வத்துடன் காகத்தைப் பார்த்துச் செல்கின்றனர். 'டி.என்.ஏ., குறைபாட்டால் ஏற்படும், 'அல்பினீசம்' நோயால், உடலில் நிறம் மாறும்; இதனால், தோலில் நிறங்களை உருவாக்கும், 'மெலனின்' குறைபாடு ஏற்படும். இது, மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என, அனைத்து உயிரினங்களிலும் தோன்றும்' என, மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, கல்வராயன் மலை, சேராப்பட்டு கிராமத்தில், கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது. இந்த வளாகத்தில், மாணவ, மாணவியர் விடுதி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மரங்களில், காகங்கள் கூடு கட்டி வாழ்கின்றன; ஒரு கூட்டில் இருந்த, காக்கை குஞ்சு வெள்ளை நிறத்தில் இருந்ததால், மற்ற காகங்கள், அதை விரட்டின. இதனால், வெள்ளை நிற காகம், அங்குள்ள வேப்ப மரத்தில் தனியே கூடு கட்டி வாழ்கிறது. இதையறிந்த, அப்பகுதி மக்கள், ஆர்வத்துடன் காகத்தைப் பார்த்துச் செல்கின்றனர். 'டி.என்.ஏ., குறைபாட்டால் ஏற்படும், 'அல்பினீசம்' நோயால், உடலில் நிறம் மாறும்; இதனால், தோலில் நிறங்களை உருவாக்கும், 'மெலனின்' குறைபாடு ஏற்படும். இது, மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என, அனைத்து உயிரினங்களிலும் தோன்றும்' என, மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.