சென்னை: இயக்குநர் மணிரத்னம் பெயரில் ட்விட்டரில் யாரோ போலியாக கணக்கு தொடங்கியுள்ளனர்.
பாலிவுட்டின் பெரும்பாலான நடிகர்கள் ட்விட்டரில் இணைந்து, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். இதுவரை அமைதியாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்தார்.
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் பெயரில் இன்று ட்விட்டரில் ஒரு கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'ஐமணிரத்னம்' என்பது ட்விட்டர் பக்க ஐடி.
மணிரத்னம் குறுந்தாடியுடன் புரொபைல் படத்தில் காட்சியளிக்கிறார். இன்று காலை 11 மணியளவில் 'நான் இப்போது ட்விட்டரில்' என்று முதல் ட்விட் செய்யப்பட்டுள்ளது. நான்தான் ஒரிஜினல் மணிரத்னம் என்று வேறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது ட்விட்டில், தன்னை ட்விட்டர் உலகத்திற்கு அழைத்துவந்தது மனைவி சுகாசினிதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ட்விட்டரால் இன்னும் ஒரிஜினல் ஐடி என சரிபார்க்கப்படவில்லை. அடுத்தது, அங்கு தரப்பட்டுள்ள சுஹாசினியின் ட்விட்டர் பக்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாம் விசாரித்ததில், இது போலியான கணக்கு என்றே பலரும் கூறினர்.
இந்த நிலையில், மணிரத்னம் மனைவி சுகாசினி தனது ட்விட்டர் பக்கத்தில் மணிரத்னம் பெயரில் உள்ள இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மணிரத்னம் பெயரில் ஏற்கெனவே இரு போலி கணக்குகள் ட்விட்டரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் ட்விட்டருக்கு உண்மையாகவே வரும்போது, கணக்கு ஆரம்பிக்க அவர் பெயரே அவருக்குக் கிடைக்காது போலிருக்கே!
பாலிவுட்டின் பெரும்பாலான நடிகர்கள் ட்விட்டரில் இணைந்து, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். இதுவரை அமைதியாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்தார்.
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் பெயரில் இன்று ட்விட்டரில் ஒரு கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'ஐமணிரத்னம்' என்பது ட்விட்டர் பக்க ஐடி.
மணிரத்னம் குறுந்தாடியுடன் புரொபைல் படத்தில் காட்சியளிக்கிறார். இன்று காலை 11 மணியளவில் 'நான் இப்போது ட்விட்டரில்' என்று முதல் ட்விட் செய்யப்பட்டுள்ளது. நான்தான் ஒரிஜினல் மணிரத்னம் என்று வேறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது ட்விட்டில், தன்னை ட்விட்டர் உலகத்திற்கு அழைத்துவந்தது மனைவி சுகாசினிதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ட்விட்டரால் இன்னும் ஒரிஜினல் ஐடி என சரிபார்க்கப்படவில்லை. அடுத்தது, அங்கு தரப்பட்டுள்ள சுஹாசினியின் ட்விட்டர் பக்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாம் விசாரித்ததில், இது போலியான கணக்கு என்றே பலரும் கூறினர்.
இந்த நிலையில், மணிரத்னம் மனைவி சுகாசினி தனது ட்விட்டர் பக்கத்தில் மணிரத்னம் பெயரில் உள்ள இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மணிரத்னம் பெயரில் ஏற்கெனவே இரு போலி கணக்குகள் ட்விட்டரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் ட்விட்டருக்கு உண்மையாகவே வரும்போது, கணக்கு ஆரம்பிக்க அவர் பெயரே அவருக்குக் கிடைக்காது போலிருக்கே!