RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

பொங்கல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் உத்தரவு

From: 'விஸ்தாரம்'

POST 111/1/2014, 4:15 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு சிறப்புற பணிபுரியும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊக்கத் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் உத்தரவு Jaya

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2013 ஆம் ஆண்டில் 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக “சாதனை ஊக்கத் தொகை” வழங்கப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 1 லட்சத்து 31 ஆயிரத்து 332 பணியாளர்களுக்கு 7 கோடியே 42 லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

இதே போன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ‘ஏ’ மற்றும் ‘பி’ தொகுப்பு அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் செயலாக்க ஊக்கத் தொகையாக 1,000 ரூபாயும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெற்ற ‘சி’ மற்றும் ‘டி’ தொகுப்பு பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் செயலாக்க ஊக்கத் தொகையாக 350 ரூபாயும் வழங்கப்படும்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள், பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களில், 2013 ஆம் ஆண்டில் 90 நாட்கள் மற்றும் அதற்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு 145 ரூபாய் வீதமும்; 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 240 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 400 ரூபாய் வீதமும்; 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு 1,000 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக “உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை” வழங்கப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள், பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் சுமார் 25,613 பணியாளர்களுக்கு 2 கோடியே 64 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

மொத்தத்தில், இந்த அறிவிப்பின் மூலம் 1,95,844 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT