போபால்:நரேந்திர மோடி பிரதமராவதை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலோ, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலோ தடுக்க முடியாது என சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நேற்று விருது வழங்கும் விழாவில் ராமன்சிங் கலந்து கொண்டார்.இவ்விழாவில், அமில வீச்சுத் தாக்குதலுக்குள்ளான லட்சுமி என்ற பெண்ணுக்கும், தொழுநோயாளிகளின் நலவாழ்வுக்காகப் பாடுபட்டு வரும் சமூக சேவகி கவிதா பட்டாராய்க்கு ஓஜஸ்வனி விருதை அவர் வழங்கினார்.
அமில வீச்சுக்கு எதிராக லட்சுமி தொடர்ந்த பொது நல வழக்கின் மீது, சந்தையில் அமிலம் விற்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த போது நரேந்திர மோடி பிரதமராவதை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலோ, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலோ தடுக்க முடியாது என ராமன்சிங் தெரிவித்தார்.
அப்போது அவர் மேலும் கூறுகையில்,லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரம் வந்துவிட்டது.இந்நிலையில் தேர்தல் களத்தில் யார் வந்தாலும் மோடி பிரதமராவதை ஒன்றும் செய்துவிட முடியாது என்றார். கடந்த லோக்சபா தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 11 லோக்சபா சீட்களில் 10ல் வெற்றி பெற்றது பா.ஜ.க., ஆனால் இம்முறை 11 சீட்களையும் பெற்று விடும் என்றார்.
இயற்கை எழில் அதிகம் உள்ள நகரமான இங்கு நான் 10 ஆண்டுகள் இருந்துள்ளேன். என் இனிய நினைவுகள் மனதில் நீங்காமல் உள்ளன. போபால் நாட்டில் உள்ள தலைநகரங்களில் சிறந்த ஒன்றாகவும் இருக்கிறது என்றார் முதல்வர் ராமன்சிங்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நேற்று விருது வழங்கும் விழாவில் ராமன்சிங் கலந்து கொண்டார்.இவ்விழாவில், அமில வீச்சுத் தாக்குதலுக்குள்ளான லட்சுமி என்ற பெண்ணுக்கும், தொழுநோயாளிகளின் நலவாழ்வுக்காகப் பாடுபட்டு வரும் சமூக சேவகி கவிதா பட்டாராய்க்கு ஓஜஸ்வனி விருதை அவர் வழங்கினார்.
அமில வீச்சுக்கு எதிராக லட்சுமி தொடர்ந்த பொது நல வழக்கின் மீது, சந்தையில் அமிலம் விற்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த போது நரேந்திர மோடி பிரதமராவதை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலோ, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலோ தடுக்க முடியாது என ராமன்சிங் தெரிவித்தார்.
அப்போது அவர் மேலும் கூறுகையில்,லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரம் வந்துவிட்டது.இந்நிலையில் தேர்தல் களத்தில் யார் வந்தாலும் மோடி பிரதமராவதை ஒன்றும் செய்துவிட முடியாது என்றார். கடந்த லோக்சபா தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 11 லோக்சபா சீட்களில் 10ல் வெற்றி பெற்றது பா.ஜ.க., ஆனால் இம்முறை 11 சீட்களையும் பெற்று விடும் என்றார்.
இயற்கை எழில் அதிகம் உள்ள நகரமான இங்கு நான் 10 ஆண்டுகள் இருந்துள்ளேன். என் இனிய நினைவுகள் மனதில் நீங்காமல் உள்ளன. போபால் நாட்டில் உள்ள தலைநகரங்களில் சிறந்த ஒன்றாகவும் இருக்கிறது என்றார் முதல்வர் ராமன்சிங்.