சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதோடு மட்டுமல்லாது உற்சாகமாக பொங்கல் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் தமிழகத் தலைவர்கள்.
திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.திமுக தலைவர் காலை நேரத்திலேயே பட்டு வேட்டி பட்டு சட்டை மஞ்சள் துண்டு அணிந்து உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா உடன் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.
பேரன்கள் உதயநிதி, துரை தயாநிதி ஆகியோர் தங்களின் மனைவி குழந்தைகளுடன் தாத்தாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் தனது மனைவி, குழந்தைகளுடன் திமுக தலைவரும் தாத்தாவுமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.
சென்னை மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் 14, 15, 16ம் தேதி பொங்கல் விழா மற்றும் தமிழர் திருவிழா ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து 14ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். உடன் ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரத்தில் கரும்பு வீட்டின் முன் விவசாய பொருட்களை படைத்து பொங்கல் கொண்டாடினார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சாலைகள் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன.
விழுப்புரத்தில் வசித்து வரும் திருநங்கைகள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா மற்றும் தொண்டர்களுடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். மாட்டுப் பொங்கல் தினமான இன்று பசு மாட்டினையும், கன்றையும் வணங்கி அகத்திக் கீரை கொடுத்தார்.
திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.திமுக தலைவர் காலை நேரத்திலேயே பட்டு வேட்டி பட்டு சட்டை மஞ்சள் துண்டு அணிந்து உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா உடன் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.
பேரன்கள் உதயநிதி, துரை தயாநிதி ஆகியோர் தங்களின் மனைவி குழந்தைகளுடன் தாத்தாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் தனது மனைவி, குழந்தைகளுடன் திமுக தலைவரும் தாத்தாவுமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.
சென்னை மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் 14, 15, 16ம் தேதி பொங்கல் விழா மற்றும் தமிழர் திருவிழா ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து 14ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். உடன் ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரத்தில் கரும்பு வீட்டின் முன் விவசாய பொருட்களை படைத்து பொங்கல் கொண்டாடினார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சாலைகள் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன.
விழுப்புரத்தில் வசித்து வரும் திருநங்கைகள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா மற்றும் தொண்டர்களுடன் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். மாட்டுப் பொங்கல் தினமான இன்று பசு மாட்டினையும், கன்றையும் வணங்கி அகத்திக் கீரை கொடுத்தார்.