புதுடில்லி : ''மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு சார்பில், தற்போதை சூழ்நிலையில், இனி புதிய குழு அமைக்கப்படாது,'' என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், வீரப்ப மொய்லி, திட்டவட்டமாக கூறினார்.
கேரளா, தமிழகம், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில், பரந்து விரிந்து உள்ள, மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலையும், உயிர்ச் சூழலையும் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட, கஸ்தூரி ரங்கன் குழு, சில முக்கியமான பரிந்துரைகளை அளித்தது.
இதன்படி, மலைத் தொடரின், 37 சதவீதம் பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பகுதியில், பெரிய கட்டடங்கள் கட்டுவது, குவாரிகள் அமைப்பது, அணைகள், அணு மின் நிலையம் ஆகியவை செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து, மத்திய சுற்றுச் சூழல் துறைக்கு, புதிதாக பொறுப்பேற்றுள்ள வீரப்ப மொய்லி கூறியதாவது:
கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை தொடர்பாக, மாநில அரசுகள் சார்பில், சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு தீர்வு காணப்படும். கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதில் உள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, சம்பந்தபட்ட மாநில அரசுகள், தனியாக குழுக்களை அமைத்து கொள்ளலாம்.
அந்த குழுக்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பின், அவற்றுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் துவங்கப்படும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், மத்திய அரசு சார்பில், இதற்காக, இனி, குழு எதுவும் அமைக்கப்படாது.
இது தொடர்பாக, சம்பந்தபட்ட மாநிலங்களின் முதல்வர்களுக்கு, விரிவான கடிதங்களை எழுத முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு, வீரப்ப மொய்லி கூறினார்.
கேரளா, தமிழகம், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில், பரந்து விரிந்து உள்ள, மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலையும், உயிர்ச் சூழலையும் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட, கஸ்தூரி ரங்கன் குழு, சில முக்கியமான பரிந்துரைகளை அளித்தது.
இதன்படி, மலைத் தொடரின், 37 சதவீதம் பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பகுதியில், பெரிய கட்டடங்கள் கட்டுவது, குவாரிகள் அமைப்பது, அணைகள், அணு மின் நிலையம் ஆகியவை செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து, மத்திய சுற்றுச் சூழல் துறைக்கு, புதிதாக பொறுப்பேற்றுள்ள வீரப்ப மொய்லி கூறியதாவது:
கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை தொடர்பாக, மாநில அரசுகள் சார்பில், சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு தீர்வு காணப்படும். கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதில் உள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, சம்பந்தபட்ட மாநில அரசுகள், தனியாக குழுக்களை அமைத்து கொள்ளலாம்.
அந்த குழுக்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பின், அவற்றுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் துவங்கப்படும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், மத்திய அரசு சார்பில், இதற்காக, இனி, குழு எதுவும் அமைக்கப்படாது.
இது தொடர்பாக, சம்பந்தபட்ட மாநிலங்களின் முதல்வர்களுக்கு, விரிவான கடிதங்களை எழுத முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு, வீரப்ப மொய்லி கூறினார்.