தை மாதம் பிறக்கப் போகிறது என்று எண்ணும்போதே நம் அனைவர் மனதிலும் உற்சாகம் ஊற்றெடுக்கும். சுப விசேஷங்களைச் செய்வதற்காக தைமாதம் எப்போது பிறக்கும் என பலரும் காத்திருப்போம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் ஏதுமின்றி எல்லோரும் குடும்பத்துடன் பொங்கல் வைத்துக் கொண்டாடும் விழா நாளோடு தொடங்கும் மாதமிது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் நாட்டில் உழவர்களுக்கான திருநாளைக் கொண்டாடுவதும், காலமெல்லாம் நம்மோடு சேர்ந்து உழைக்கும் கால்நடைகளை சிறப்பிக்கும் பொருட்டு கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் திருநாளும், நண்பர்கள், தெரிந்தவர்கள் என ஒருவருக்கொருவர் ‘பால் பொங்கிடுச்சா...?’ என்று பரஸ்பரம் உபசரித்துக் கொள்ளும் பழக்கத்தை காணும்பொங்கலாகக் கொண்டாடுவதும், சீறி வரும் காளைகளை அடக்கத் தோள்கள் துடிதுடிக்க இளைஞர்கள் திமிறிப் பாயும் ஜல்லிக்கட்டு திருவிழாவும் தமிழ்த்திருநாட்டில் தை மாதத்தின் தனிச்சிறப்புகள் எனலாம்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்...” என்பது அனைவரும் அறிந்த சொல்வழக்கு. உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட நம் நாட்டில் ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்து, ஆறுமாதம் கழித்து அறுவடை முடித்து, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வணங்குவர். அறுவடை செய்த பயிரை விற்றுப் பணம் சம்பாதிப்பது தை மாதத்தில் என்பதால் தை மாதத்தில் திருமணம், வீடு கட்டுதல் முதலான சுபதிட்டங்களை மேற்கொள்ளலாம். கையில் பணமின்றி இந்தத் திட்டங்களைத் தள்ளி வைப்போருக்கு, தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற அர்த்தத்தில் கிராமத்துப் பெரியவர்கள் சொல்வார்கள்.
தை முதல் ஆனி மாதம் வரையிலான காலகட்டம் உத்தராயணம் எனப்படும். இந்த ஆறு மாத காலத்தை எல்லா சமூகத்தினரும் உழைத்து சம்பாதிக்க வேண்டிய காலமாக வகுத்திருந்தனர். ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனம் எனும் ஆறு மாத காலத்தை தேவர்களைப் பூஜிப்பதற்கும், ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற பொதுச் சேவையில் ஈடுபடுவதற்கான காலமாகப் பிரித்தார்கள். வேத விற்பன்னர்கள்கூட ஆவணி அவிட்டம் நாள் முதல் வேத மந்திரங்களைக் கற்பதையும், தை மாதத்தில் இருந்து கற்ற மந்திரங்களின் துணை கொண்டு பணம் சம்பாதிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அனைத்து தரப்பினரும் உத்தராயணத்தில் சம்பாதித்த பொருளை தட் சிணாயனத்தில் செலவழித்தனர். கையிருப்பு கரைந்தவுடன் மீண்டும் தை மாதம் முதல் பொருள் தேடத் துவங்குவர். புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாதமாக தை மாதத்தைத் தேர்ந்தெடுத்தனர். யாகங்களைச் செய்து வரும் வேத விற்பன்னர்கள் சிராவண மாதம் பௌர்ணமியில் (ஆவணி அவிட்டம்) இருந்து மார்கழி மாத பௌர்ணமி வரை சர்ப்ப பலி எனும் யாக பூஜையைச் செய்வது வழக்கம். இதற்குக் காரணம் இந்த இடைப்பட்ட காலத்தில்தான் பாம்பு, தேள், மரவட்டை, பூரான், நத்தை, அட்டை, கம்பளிப்பூச்சி முதலான விஷப்பூச்சிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் வரும்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்...” என்பது அனைவரும் அறிந்த சொல்வழக்கு. உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட நம் நாட்டில் ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்து, ஆறுமாதம் கழித்து அறுவடை முடித்து, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வணங்குவர். அறுவடை செய்த பயிரை விற்றுப் பணம் சம்பாதிப்பது தை மாதத்தில் என்பதால் தை மாதத்தில் திருமணம், வீடு கட்டுதல் முதலான சுபதிட்டங்களை மேற்கொள்ளலாம். கையில் பணமின்றி இந்தத் திட்டங்களைத் தள்ளி வைப்போருக்கு, தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற அர்த்தத்தில் கிராமத்துப் பெரியவர்கள் சொல்வார்கள்.
தை முதல் ஆனி மாதம் வரையிலான காலகட்டம் உத்தராயணம் எனப்படும். இந்த ஆறு மாத காலத்தை எல்லா சமூகத்தினரும் உழைத்து சம்பாதிக்க வேண்டிய காலமாக வகுத்திருந்தனர். ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனம் எனும் ஆறு மாத காலத்தை தேவர்களைப் பூஜிப்பதற்கும், ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற பொதுச் சேவையில் ஈடுபடுவதற்கான காலமாகப் பிரித்தார்கள். வேத விற்பன்னர்கள்கூட ஆவணி அவிட்டம் நாள் முதல் வேத மந்திரங்களைக் கற்பதையும், தை மாதத்தில் இருந்து கற்ற மந்திரங்களின் துணை கொண்டு பணம் சம்பாதிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அனைத்து தரப்பினரும் உத்தராயணத்தில் சம்பாதித்த பொருளை தட் சிணாயனத்தில் செலவழித்தனர். கையிருப்பு கரைந்தவுடன் மீண்டும் தை மாதம் முதல் பொருள் தேடத் துவங்குவர். புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாதமாக தை மாதத்தைத் தேர்ந்தெடுத்தனர். யாகங்களைச் செய்து வரும் வேத விற்பன்னர்கள் சிராவண மாதம் பௌர்ணமியில் (ஆவணி அவிட்டம்) இருந்து மார்கழி மாத பௌர்ணமி வரை சர்ப்ப பலி எனும் யாக பூஜையைச் செய்வது வழக்கம். இதற்குக் காரணம் இந்த இடைப்பட்ட காலத்தில்தான் பாம்பு, தேள், மரவட்டை, பூரான், நத்தை, அட்டை, கம்பளிப்பூச்சி முதலான விஷப்பூச்சிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் வரும்.