தமிழகத்தில் காங்கிரஸ்- திமுகவுக்கு எதிராக பாஜக தலைமையில் புதிய அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தட்ஸ்தமிழுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியின் தொடர்ச்சி...
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பாஜக, அதிமுக இணைய வாய்ப்புள்ளதா?
தமிழருவி மணியன்: இன்றைக்கு எல்லாமே சந்தர்ப்பவாத அரசியலாகப் போய்விட்டது. நாளை தேர்தல் முடிந்த பின்னர் ஜெயலலிதா பிரதமராகும் சூழல் ஏற்பட்டு பாஜக ஆதரவு கொடுக்க முன்வந்தால் அவர் வேண்டாம் என்று சொல்லிவிடுவாரா?. அதேபோல பாஜக வெற்றி பெற்று, மோடி பிரதமராவதற்கு ஜெயலலிதா ஆதரவினை கேட்கும் பட்சத்தில் முக்கிய அமைச்சரவையை தருகிறோம் என்று கூறினால் அவர் வேண்டாம் என்று கூறிவிடுவாரா?
இடதுசாரிகள் அதிமுக உடன் இருக்கின்றனர். சிறுபான்மையினர் வாக்கு வங்கி சிதறிவிடக்கூடாது என்று ஜெயலலிதா வேடமிடுகிறார். அதேபோல இன்றைக்கு மதவாத சக்திகளைப் பற்றி பேசும் கருணாநிதி 99ல் வாஜ்பாஜ்க்கு ஆதரவு கொடுத்தவர்தானே. அவரது கட்சியினர்தானே பாஜக ஆட்சிகாலத்தில் அமைச்சரவையில் பதவி வகித்தனர். இன்றைக்கு அவருடைய கூட்டணியில் இருக்கும் திருமாளவன், மனித நேய மக்கள் கட்சியினருக்கு இது தெரியாதா?
கேள்வி: முன்பு காங்கிரஸ், பின்னர் லோக்சக்தி, தற்போது பாஜக ஆதரவு நிலைப்பாடு... உங்களது பாதையில் தெளிவு இருப்பதாக கருதுகிறீர்களா...
தமிழருவி மணியன்: மாணவப் பருவத்திலேயே பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தி அம்மையார் உடைத்த போது அப்போது காமராஜரின் பின்னாளில்தான் நின்றேன். காமராஜரின் மறைவிற்குப் பின்னர் ஜனதா கட்சியில் இணைந்தேன். ராமகிருஷ்ண ஹெக்டே ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக்சக்தியை தொடங்கியபோது அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக பொறுப்பேற்றேன். பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.
ஒரிஸாவில் கிருஸ்தவர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட போது தமிழகத்தில் இருந்து முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான். அப்போது எனக்கும் ராமகிருஷ்ண ஹெக்டேவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அதிலிருந்து விலகினேன்.
மூப்பனார் ஐயா அவர்களின் அழைப்பினை ஏற்று தமிழ் மாநில காங்கிரசில் இணைந்தேன். அப்போது அவரிடம் இரண்டு வரங்களைக் கேட்டேன். ஒருபோதும், திமுக, அதிமுக உடன் கூட்டணி வைக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கக் கூடாது என்பதுதான் அது. ஆனால் 1996ல் திமுக உடன் கூட்டணி வைத்த மூப்பனார், 2001ம் ஆண்டு அதிமுக உடன் கூட்டணி அமைத்தார். பின்னர் அவரது மறைவிற்குப் பின்னர் ஜி.கே. வாசன் கட்சியினை அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். ஈழத்தமிழர் பிரச்சினையில் நான் காங்கிரசில் இருந்து விலகினேன். 2009ம் ஆண்டு காந்திய மக்கள் இயக்கத்தினை தொடங்கி மக்களுக்காக சேவை செய்து வருகிறேன். என்னுடைய பாதை தெளிவானதாகத்தான் இருக்கிறது.
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பாஜக, அதிமுக இணைய வாய்ப்புள்ளதா?
தமிழருவி மணியன்: இன்றைக்கு எல்லாமே சந்தர்ப்பவாத அரசியலாகப் போய்விட்டது. நாளை தேர்தல் முடிந்த பின்னர் ஜெயலலிதா பிரதமராகும் சூழல் ஏற்பட்டு பாஜக ஆதரவு கொடுக்க முன்வந்தால் அவர் வேண்டாம் என்று சொல்லிவிடுவாரா?. அதேபோல பாஜக வெற்றி பெற்று, மோடி பிரதமராவதற்கு ஜெயலலிதா ஆதரவினை கேட்கும் பட்சத்தில் முக்கிய அமைச்சரவையை தருகிறோம் என்று கூறினால் அவர் வேண்டாம் என்று கூறிவிடுவாரா?
இடதுசாரிகள் அதிமுக உடன் இருக்கின்றனர். சிறுபான்மையினர் வாக்கு வங்கி சிதறிவிடக்கூடாது என்று ஜெயலலிதா வேடமிடுகிறார். அதேபோல இன்றைக்கு மதவாத சக்திகளைப் பற்றி பேசும் கருணாநிதி 99ல் வாஜ்பாஜ்க்கு ஆதரவு கொடுத்தவர்தானே. அவரது கட்சியினர்தானே பாஜக ஆட்சிகாலத்தில் அமைச்சரவையில் பதவி வகித்தனர். இன்றைக்கு அவருடைய கூட்டணியில் இருக்கும் திருமாளவன், மனித நேய மக்கள் கட்சியினருக்கு இது தெரியாதா?
கேள்வி: முன்பு காங்கிரஸ், பின்னர் லோக்சக்தி, தற்போது பாஜக ஆதரவு நிலைப்பாடு... உங்களது பாதையில் தெளிவு இருப்பதாக கருதுகிறீர்களா...
தமிழருவி மணியன்: மாணவப் பருவத்திலேயே பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தி அம்மையார் உடைத்த போது அப்போது காமராஜரின் பின்னாளில்தான் நின்றேன். காமராஜரின் மறைவிற்குப் பின்னர் ஜனதா கட்சியில் இணைந்தேன். ராமகிருஷ்ண ஹெக்டே ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக்சக்தியை தொடங்கியபோது அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக பொறுப்பேற்றேன். பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.
ஒரிஸாவில் கிருஸ்தவர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட போது தமிழகத்தில் இருந்து முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான். அப்போது எனக்கும் ராமகிருஷ்ண ஹெக்டேவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அதிலிருந்து விலகினேன்.
மூப்பனார் ஐயா அவர்களின் அழைப்பினை ஏற்று தமிழ் மாநில காங்கிரசில் இணைந்தேன். அப்போது அவரிடம் இரண்டு வரங்களைக் கேட்டேன். ஒருபோதும், திமுக, அதிமுக உடன் கூட்டணி வைக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கக் கூடாது என்பதுதான் அது. ஆனால் 1996ல் திமுக உடன் கூட்டணி வைத்த மூப்பனார், 2001ம் ஆண்டு அதிமுக உடன் கூட்டணி அமைத்தார். பின்னர் அவரது மறைவிற்குப் பின்னர் ஜி.கே. வாசன் கட்சியினை அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். ஈழத்தமிழர் பிரச்சினையில் நான் காங்கிரசில் இருந்து விலகினேன். 2009ம் ஆண்டு காந்திய மக்கள் இயக்கத்தினை தொடங்கி மக்களுக்காக சேவை செய்து வருகிறேன். என்னுடைய பாதை தெளிவானதாகத்தான் இருக்கிறது.