சென்னை: "கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை" என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைய வேண்டும் என்றும், விஜயகாந்தை அழைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: தமிழ்நாட்டில் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான 6 பேர் பதவி காலம் முடிவடை வதால், பிப்ரவரி 7ஆம் தேதி தேர்தல் வருகிறது. தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு பேர்களின் பதவிக் காலமும் முடிவடைகிறது. அந்தத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா?
கருணாநிதி: அதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
கேள்வி: தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தை நடந்திருக்கிறதா? பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கிறதா?
கருணாநிதி: பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை, அதனால் முன்னேற்றம் என்ற கேள்விக்கு இடமில்லை.
கேள்வி: சென்னையில் ரயிலில் பயணம் செய்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணியிடமே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதே; தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படியுள்ளது?
கருணாநிதி:- தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால் அல்லவா அதைப் பற்றி பேச முடியும்.
கேள்வி: திருச்சி மாநில மாநாட்டு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு தீவிரமாக நடைபெறுகிறது?
கருணாநிதி: மிகச் சிறப்பான அளவுக்கு நடைபெறுகிறது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
ஸ்டாலின் கருத்து முன்னதாக இதே கருத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க. கூட்டணியில் வந்து சேருமாறு தே.மு.தி.க.வுக்கு கருணாநிதி வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.
தே.மு.தி.க. எங்கள் பக்கம் வந்தால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு திருமணத்துக்கு அழைக்கவே விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். நாங்கள் அவரை விஜயகாந்துடன் சந்திக்க சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.
இதுநாள் வரை விஜயகாந்த் வந்தால் மகிழ்ச்சியடைவோம் என்று இரு தலைவர்களும் கூறிவந்த நிலையில், விஜயகாந்தின் மவுனத்தைப் பார்த்து இதுவரை கூட்டணி பற்றி பேசவே இல்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைய வேண்டும் என்றும், விஜயகாந்தை அழைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: தமிழ்நாட்டில் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான 6 பேர் பதவி காலம் முடிவடை வதால், பிப்ரவரி 7ஆம் தேதி தேர்தல் வருகிறது. தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு பேர்களின் பதவிக் காலமும் முடிவடைகிறது. அந்தத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா?
கருணாநிதி: அதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
கேள்வி: தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தை நடந்திருக்கிறதா? பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கிறதா?
கருணாநிதி: பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை, அதனால் முன்னேற்றம் என்ற கேள்விக்கு இடமில்லை.
கேள்வி: சென்னையில் ரயிலில் பயணம் செய்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணியிடமே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதே; தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படியுள்ளது?
கருணாநிதி:- தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால் அல்லவா அதைப் பற்றி பேச முடியும்.
கேள்வி: திருச்சி மாநில மாநாட்டு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு தீவிரமாக நடைபெறுகிறது?
கருணாநிதி: மிகச் சிறப்பான அளவுக்கு நடைபெறுகிறது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
ஸ்டாலின் கருத்து முன்னதாக இதே கருத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க. கூட்டணியில் வந்து சேருமாறு தே.மு.தி.க.வுக்கு கருணாநிதி வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.
தே.மு.தி.க. எங்கள் பக்கம் வந்தால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு திருமணத்துக்கு அழைக்கவே விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். நாங்கள் அவரை விஜயகாந்துடன் சந்திக்க சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.
இதுநாள் வரை விஜயகாந்த் வந்தால் மகிழ்ச்சியடைவோம் என்று இரு தலைவர்களும் கூறிவந்த நிலையில், விஜயகாந்தின் மவுனத்தைப் பார்த்து இதுவரை கூட்டணி பற்றி பேசவே இல்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.