சென்னை: சென்னையில் கருணாநிதி ஏற்பாடு செய்த சமாதான பேச்சுவார்த்தையை மு.க. அழகிரி நிராகரித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுகவில் கட்சி விரோத நடவடிக்கைக்காக மு.க. அழகிரி நேற்று தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் அழகிரி, ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகிய மூன்று பேரையும் ஒன்றாக அமரவைத்து பேசி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கருணாநிதியை தி.மு.க. 2-ம் நிலைத் தலைவர்கள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மட்டும் சென்றனராம்.
ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தையை மு.க. அழகிரி ஏற்க மறுத்து கோபாலபுரத்துக்கு வரவில்லையாம். ஸ்டாலின், கனிமொழி ஆகியோருடன் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரை முருகன், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் நேரு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திவிட்டு சென்றனராம்.
திமுகவில் கட்சி விரோத நடவடிக்கைக்காக மு.க. அழகிரி நேற்று தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் அழகிரி, ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகிய மூன்று பேரையும் ஒன்றாக அமரவைத்து பேசி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கருணாநிதியை தி.மு.க. 2-ம் நிலைத் தலைவர்கள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மட்டும் சென்றனராம்.
ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தையை மு.க. அழகிரி ஏற்க மறுத்து கோபாலபுரத்துக்கு வரவில்லையாம். ஸ்டாலின், கனிமொழி ஆகியோருடன் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரை முருகன், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் நேரு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திவிட்டு சென்றனராம்.