சென்னை: அஜீத்தின் கொடையுள்ளம் பற்றி தினசரி ஏதாவது ஒரு செய்தி வெளியாவது வழக்கமாகிவிட்டது.
இன்றைய செய்தி... அவர் தனது வீட்டு வேலையாட்களுக்கு புதிய வீடு கட்டித் தந்திருப்பதுதான்.
தன் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி 5 கிரவுண்ட் நிலம் வாங்கி, அதை பத்தாகப் பிரித்து, தன் வீட்டில் பணியாற்றுபவர்களுக்கு முன்பு பத்திரப் பதிவு செய்து வைத்தார் அல்லவா...
அந்த இடத்தில் தன் மனைவி ஷாலினி மேற்பார்வையில் 10 வீடுகளைக் கட்டியுள்ளார் அஜீத். தேவையான வசதிகளுடன் அந்த வீட்டைக் கட்டிய அஜீத், ஒரு குடும்பத்துக்குத் தேவையான அறைகலன்களைக் கூட தன் சொந்த செலவிலேயே வாங்கிக் கொடுத்துள்ளார்.
கவுதம் மேனன் படத்தின் படப்பிடிப்புக்காக மலேஷியா போயிருக்கும் அஜீத், ஷூட்டிங் முடிந்து திரும்பியதும், புதுமனைப் புகுவிழா நடத்தி, தன் பணியாளர்கள் பத்து பேரிடமும் சாவியைத் தரவிருக்கிறார்.
ஏற்கெனவே தன்னிடம் வேலைப் பார்த்த 25 பேருக்கு தலா 1 கிரவுண்டில் கேளம்பாக்கத்தில் வீடு கட்டிக் கொடுத்து முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இப்போது அவர் பாணியில் அஜீத்!
இன்றைய செய்தி... அவர் தனது வீட்டு வேலையாட்களுக்கு புதிய வீடு கட்டித் தந்திருப்பதுதான்.
தன் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி 5 கிரவுண்ட் நிலம் வாங்கி, அதை பத்தாகப் பிரித்து, தன் வீட்டில் பணியாற்றுபவர்களுக்கு முன்பு பத்திரப் பதிவு செய்து வைத்தார் அல்லவா...
அந்த இடத்தில் தன் மனைவி ஷாலினி மேற்பார்வையில் 10 வீடுகளைக் கட்டியுள்ளார் அஜீத். தேவையான வசதிகளுடன் அந்த வீட்டைக் கட்டிய அஜீத், ஒரு குடும்பத்துக்குத் தேவையான அறைகலன்களைக் கூட தன் சொந்த செலவிலேயே வாங்கிக் கொடுத்துள்ளார்.
கவுதம் மேனன் படத்தின் படப்பிடிப்புக்காக மலேஷியா போயிருக்கும் அஜீத், ஷூட்டிங் முடிந்து திரும்பியதும், புதுமனைப் புகுவிழா நடத்தி, தன் பணியாளர்கள் பத்து பேரிடமும் சாவியைத் தரவிருக்கிறார்.
ஏற்கெனவே தன்னிடம் வேலைப் பார்த்த 25 பேருக்கு தலா 1 கிரவுண்டில் கேளம்பாக்கத்தில் வீடு கட்டிக் கொடுத்து முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இப்போது அவர் பாணியில் அஜீத்!