சென்னை: திமுகவில் இருந்து குஷ்பு விலகியதால் கட்சிக்குத்தான் நஷ்டம் என்று திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
மேலும், பிரச்சனைகள் குறித்து கட்சி தலைமையிடம் பேசி தீர்வு காண நடிகை குஷ்பு தவறிவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாங்கமுடியாத மன அழுத்தத்தினாலும், தன்னுடைய முயற்சிகள் ஒருவழிப்பாதையாகவே அமைவதன் காரணமாகவும் திமுகவில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு நேற்று திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில், "என்ன பிரச்சனைக்காக கட்சியில் இருந்து விலகினார் என்பதை குஷ்பு தெரிவித்திருக்க வேண்டும். பிரச்சனை குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருக்கக் கூடும்.
இருப்பினும் கட்சியின் மீது அதிருப்தியோடு இருப்பதாக குஷ்பு தெரிவித்திருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. எந்த ஒரு கட்சியும் உறுப்பினர்களை இழப்பதை விரும்பாது. நிச்சயமாக கட்சிக்கு இதுநஷ்டம் தான். மக்களின் ஆதரவு எங்களுக்கு தேவை. அரசியல் கட்சிகள் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரச்சனைகள் குறித்து கட்சி தலைமையிடம் பேசி தீர்வு காண நடிகை குஷ்பு தவறிவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாங்கமுடியாத மன அழுத்தத்தினாலும், தன்னுடைய முயற்சிகள் ஒருவழிப்பாதையாகவே அமைவதன் காரணமாகவும் திமுகவில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு நேற்று திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில், "என்ன பிரச்சனைக்காக கட்சியில் இருந்து விலகினார் என்பதை குஷ்பு தெரிவித்திருக்க வேண்டும். பிரச்சனை குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருக்கக் கூடும்.
இருப்பினும் கட்சியின் மீது அதிருப்தியோடு இருப்பதாக குஷ்பு தெரிவித்திருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. எந்த ஒரு கட்சியும் உறுப்பினர்களை இழப்பதை விரும்பாது. நிச்சயமாக கட்சிக்கு இதுநஷ்டம் தான். மக்களின் ஆதரவு எங்களுக்கு தேவை. அரசியல் கட்சிகள் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.