சென்னை: தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை பெருக்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார் தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாவிடம் பாமக நிறுவனர் ராம்தாசு மின் திட்டங்கள் குறித்து பத்து கேள்விகளை அறிக்கை வாயிலாக கேட்டிருந்தார். தற்போது அதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பதிலளித்துள்ளார். அதில் ராமதாசின் இந்தக் கேள்விகள் ஆதாயம் தேடும் முயற்சி என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"மகன் நலம்" ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசு, "மக்கள் நலம்" ஒன்றையே சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அம்மாவிடம் மின் திட்டங்கள் தொடர்பாக பத்து கேள்விகளை எழுப்பியிருப்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே அன்றி வேறில்லை.
இருப்பினும், தமிழக மின் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் அம்மா எடுத்து வரும் முனைப்பான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக இங்கே எடுத்துக்கூற விரும்புகிறேன்.
எண்ணூர் அனல்மின் திட்ட விரிவாக்க திட்டம்:
முதலாவதாக, 660 மெகா வாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கத் திட்டம் தாமதப்படுத்தப்படுவதாக டாக்டர் ராமதாசு தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்திற்கான சுற்றுச் சூழல் அனுமதி மத்திய அரசால் 24.01.2013 அன்று வழங்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்னரே பொறியியல் கொள்முதல் கட்டுமான பணிக்கான தொழில்நுட்ப வணிக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு 15.03.2013 அன்று ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.
பாரத மிகு மின் நிறுவனம் மற்றும் லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்தன. இதனைத் தொடர்ந்து 12.08.2013 அன்று விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு 27.02.2014 அன்று இந்தத் திட்டத்திற்கான பணி ஆணை லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையில் திட்ட நிலத்தை சமன்படுத்தும் பணி ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் 08.07.2013 அன்றே மின் வாரியத்தால் துவக்கப்பட்டு, அந்தப் பணிகளும் முடிவடைந்து விட்டன. தற்போது கட்டுமானப் பணியை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்தத் திட்டத்தில் எவ்விதத் தாமதமும் ஏற்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாவிடம் பாமக நிறுவனர் ராம்தாசு மின் திட்டங்கள் குறித்து பத்து கேள்விகளை அறிக்கை வாயிலாக கேட்டிருந்தார். தற்போது அதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பதிலளித்துள்ளார். அதில் ராமதாசின் இந்தக் கேள்விகள் ஆதாயம் தேடும் முயற்சி என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"மகன் நலம்" ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசு, "மக்கள் நலம்" ஒன்றையே சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அம்மாவிடம் மின் திட்டங்கள் தொடர்பாக பத்து கேள்விகளை எழுப்பியிருப்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே அன்றி வேறில்லை.
இருப்பினும், தமிழக மின் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் அம்மா எடுத்து வரும் முனைப்பான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக இங்கே எடுத்துக்கூற விரும்புகிறேன்.
எண்ணூர் அனல்மின் திட்ட விரிவாக்க திட்டம்:
முதலாவதாக, 660 மெகா வாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கத் திட்டம் தாமதப்படுத்தப்படுவதாக டாக்டர் ராமதாசு தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்திற்கான சுற்றுச் சூழல் அனுமதி மத்திய அரசால் 24.01.2013 அன்று வழங்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்னரே பொறியியல் கொள்முதல் கட்டுமான பணிக்கான தொழில்நுட்ப வணிக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு 15.03.2013 அன்று ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.
பாரத மிகு மின் நிறுவனம் மற்றும் லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்தன. இதனைத் தொடர்ந்து 12.08.2013 அன்று விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு 27.02.2014 அன்று இந்தத் திட்டத்திற்கான பணி ஆணை லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையில் திட்ட நிலத்தை சமன்படுத்தும் பணி ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் 08.07.2013 அன்றே மின் வாரியத்தால் துவக்கப்பட்டு, அந்தப் பணிகளும் முடிவடைந்து விட்டன. தற்போது கட்டுமானப் பணியை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்தத் திட்டத்தில் எவ்விதத் தாமதமும் ஏற்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.