சென்னை: தமிழகத்தில் மின்சார துண்டிப்பு, கேபிள் துண்டிப்பு போன்ற இடையூறுகள் ஏற்பட்டதால் ஆன்லைன் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் மக்கள் குவிந்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு சொல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வையும் பெங்களூரை நோக்கி திரும்பியது.
ஆனால் தீர்ப்பு 1 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து, மக்கள் ஒருமணியை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் அரசு கேபிள் இணைப்பு துண்டிப்புக்குள்ளானது.
இதையடுத்து மக்கள் செய்தியை அறிந்துகொள்ள தொலைக்காட்சியை பார்க்க முடியவில்லை. ஆன்லைன் ஊடகங்களில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டனர். அதேபோல டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விவரங்களை அறிந்தனர்.
மொபைலும் கையுமாக தமிழகத்தில் மக்கள் அலைந்ததை பார்க்க முடிந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு சொல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வையும் பெங்களூரை நோக்கி திரும்பியது.
ஆனால் தீர்ப்பு 1 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து, மக்கள் ஒருமணியை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் அரசு கேபிள் இணைப்பு துண்டிப்புக்குள்ளானது.
இதையடுத்து மக்கள் செய்தியை அறிந்துகொள்ள தொலைக்காட்சியை பார்க்க முடியவில்லை. ஆன்லைன் ஊடகங்களில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டனர். அதேபோல டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விவரங்களை அறிந்தனர்.
மொபைலும் கையுமாக தமிழகத்தில் மக்கள் அலைந்ததை பார்க்க முடிந்தது.