பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா வி.வி.ஐ.பி. கைதி என்பதால் அவருக்கு சீருடை இல்லை. மேலும் அவர் தினமும் வெளியில் இருந்து வாங்கி வரப்படும் உணவை சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அறை எண் 23ல் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட சனிக்கிழமை இரவு அவர் சிறை உணவை சாப்பிடாமல் ஓ. பன்னீர் செல்வம் வாங்கி வந்த அடையாறு ஆனந்த பவன் உணவை சாப்பிட்டார். காலையிலும் வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட இட்லி, சாம்பார், சட்னியை சாப்பிட்டார்.
ஜெயலலிதா வி.வி.ஐ.பி. கைதி என்பதால் அவருக்கு பிற கைதிகளை போன்று சீருடை கிடையாது. மேலும் அவர் தினமும் வெளி உணவை சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறை உணவை சாப்பிட்டு வருகிறார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அறை எண் 23ல் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட சனிக்கிழமை இரவு அவர் சிறை உணவை சாப்பிடாமல் ஓ. பன்னீர் செல்வம் வாங்கி வந்த அடையாறு ஆனந்த பவன் உணவை சாப்பிட்டார். காலையிலும் வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட இட்லி, சாம்பார், சட்னியை சாப்பிட்டார்.
ஜெயலலிதா வி.வி.ஐ.பி. கைதி என்பதால் அவருக்கு பிற கைதிகளை போன்று சீருடை கிடையாது. மேலும் அவர் தினமும் வெளி உணவை சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறை உணவை சாப்பிட்டு வருகிறார்கள்.