சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவிப்பிரமாண சத்தியப் பிரமாணத்தை வாசித்தபோது அவரது குரல் தழுதழுத்தபடி இருந்தது. அவர் உள்பட அனைவருமே சோகத்துடன் காணப்பட்டனர். அந்த அரங்கமே இறுக்கமாக காணப்பட்டது. கடவுளின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் பன்னீர் செல்வம்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 பேரும் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். அனைவரும் பதவிப்பிரமாணம் எடுத்து வருகின்றனர். முதல் அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
பதவியேற்பின்போது பல அமைச்சர்கள் கண்ணீர் மல்க, லேசாக அழுதபடி பதவியேற்றது பரபரப்பாக இருந்தது.
பதவியேற்பு விழாவில், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பிற கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
முன்னதாக நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தனது சகாக்களுடன் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதைத் தொடர்ந்து ஆட்சியமைக்க வருமாறு பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.
2வது முறையாக முதல்வராகியுள்ள ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தவர். பி.ஏ. படித்துள்ள இவர் பெரியகுளம் நகராட்சித் தலைவராகவும், நகர அ.தி. மு.க. செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார்.
2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் அப்போது வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் டான்சி நில வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது, 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை முதல்வராகப் பணியாற்றினார்.
பின்பு ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றவுடன், பொதுப்பணி, மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
2006-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெரியகுளம் சட்டசபை தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் எதிர்க் கட்சி தலைவராக பணியாற்றினார்.
கடந்த சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும், கவிதாபானு என்ற மகளும் உள்ளனர்.
முன்னதாக எந்த நேரத்தில் பன்னீர் செல்வம் பதவியேற்பார் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. 1.30 மணிக்குள் பதவியேற்றாக வேண்டும். இல்லாவிட்டால் குளிகை வந்து விடும் என்ற நிலை. இந்த நிலையில் குளிகை தொடங்க 5 நிமிடம் இருந்த நிலையில் பதவியேற்றுக் கொண்டார் பன்னீர் செல்வம்.
ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்பு விழாவில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், பல்துறைச் செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வராகப் பதவியேற்ற பின்னர் தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அங்கு தனது அமைச்சரவை சகாக்களுடன் தனது முதல் ஆலோசனையை மேற்கொண்டார்.
பதவிப்பிரமாண சத்தியப் பிரமாணத்தை வாசித்தபோது அவரது குரல் தழுதழுத்தபடி இருந்தது. அவர் உள்பட அனைவருமே சோகத்துடன் காணப்பட்டனர். அந்த அரங்கமே இறுக்கமாக காணப்பட்டது. கடவுளின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் பன்னீர் செல்வம்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 பேரும் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். அனைவரும் பதவிப்பிரமாணம் எடுத்து வருகின்றனர். முதல் அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
பதவியேற்பின்போது பல அமைச்சர்கள் கண்ணீர் மல்க, லேசாக அழுதபடி பதவியேற்றது பரபரப்பாக இருந்தது.
பதவியேற்பு விழாவில், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பிற கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
முன்னதாக நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தனது சகாக்களுடன் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதைத் தொடர்ந்து ஆட்சியமைக்க வருமாறு பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.
2வது முறையாக முதல்வராகியுள்ள ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தவர். பி.ஏ. படித்துள்ள இவர் பெரியகுளம் நகராட்சித் தலைவராகவும், நகர அ.தி. மு.க. செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார்.
2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் அப்போது வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் டான்சி நில வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது, 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை முதல்வராகப் பணியாற்றினார்.
பின்பு ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றவுடன், பொதுப்பணி, மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
2006-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெரியகுளம் சட்டசபை தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் எதிர்க் கட்சி தலைவராக பணியாற்றினார்.
கடந்த சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும், கவிதாபானு என்ற மகளும் உள்ளனர்.
முன்னதாக எந்த நேரத்தில் பன்னீர் செல்வம் பதவியேற்பார் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. 1.30 மணிக்குள் பதவியேற்றாக வேண்டும். இல்லாவிட்டால் குளிகை வந்து விடும் என்ற நிலை. இந்த நிலையில் குளிகை தொடங்க 5 நிமிடம் இருந்த நிலையில் பதவியேற்றுக் கொண்டார் பன்னீர் செல்வம்.
ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்பு விழாவில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், பல்துறைச் செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வராகப் பதவியேற்ற பின்னர் தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அங்கு தனது அமைச்சரவை சகாக்களுடன் தனது முதல் ஆலோசனையை மேற்கொண்டார்.