RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

மீனவர் பிரச்சனைக்கு பேச்சு மூலம் தீர்வு- ஈழத் தமிழர் மீது அக்கறை இல்லை என்பது உண்மை இல்லை: மன்மோகன்

From: 'விஸ்தாரம்'

POST 13/1/2014, 9:42 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
டெல்லி: தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்றும் ஈழத் தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று கூறப்படுவது உண்மை அல்ல என்றும் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது; ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கறை இல்லாமல் மத்திய அரசு இருக்கிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மீனவர் பிரச்சனைக்கு பேச்சு மூலம் தீர்வு- ஈழத் தமிழர் மீது அக்கறை இல்லை என்பது உண்மை இல்லை: மன்மோகன் இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், ஈழத் தமிழர் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பது உண்மை இல்லை. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.

மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கை அரசுடன் நாங்கள் பேசி வருகிறோம். இலங்கையின் வடக்கு பகுதியில் மீனவர்களும் தமிழக மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என நம்புகிறோம் என்றார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT