RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

அனைத்து குடிமக்களுக்கும் வளமும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும்: ஜனாதிபதி, பிரதமர் பொங்கல் வாழ்த்து

From: 'விஸ்தாரம்'

POST 115/1/2014, 4:26 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அனைத்து குடிமக்களுக்கும் லோகிரி, பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

லோகிரி, மகர சங்கராந்தி, பொங்கல் ஆகியவை கொண்டாடும் மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வளமும், மகிழ்ச்சியும் நிலைக்க நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகைகள் நம்மை பிணைக்கும் உறவை வலுப்படுத்தட்டும். நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு பாடுபட ஊக்கம் அளிக்கட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

அனைத்து குடிமக்களுக்கும் வளமும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும்: ஜனாதிபதி, பிரதமர் பொங்கல் வாழ்த்து 13-pranab-mukerji--manmohan-si

சங்கராந்தி இவ்வருடத்தின் சுபநாட்கள் தொடங்குவதை குறிக்கிறது. லோகிரியும், பொங்கலும் அறுவடை திருவிழாக்கள் ஆகும். இந்த 3 பண்டிகைகளுமே புதிய தொடக்கத்தை குறிக்கின்றன. இவை அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT