புதுடில்லி : ஓய்வுபெற்ற மற்றும் பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனிஅமைப்பை ஏற்படுத்த சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மாஜி நீதிபதிகள் மீது கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளை ஏற்றுக் கொண்டு அவர்களை சுப்ரீம் கோர்ட் கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்திருந்தது.
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதிகளான ஏ.கே.கங்குலி மற்றும் ஸ்வதந்தர் குமார் ஆகியோர் மீது பயிற்சி பெண் வழக்கறிஞர்கள் பாலி்யல் புகார் அளித்துள்ளனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து சர்ச்சைகள் மற்றும் நெருக்கடிகள் காரணமாக நீதிபதி கங்குலி, மேற்குவங்க மனிதஉரிமைகள் கழக தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் கோல்கட்டாவைச் சேர்ந்த மற்றொரு பெண் வழக்கறிஞர் தேசிய பசுமை தீர்ப்பாய தலைவரான முன்னாள் நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீது கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் புகார் அளித்துள்ளார்.
தமது புகாரை தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு அனுப்பிய அப்பெண், நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீது கோர்ட் ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஸ்வந்தர்குமார் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது 2011ல் இந்த குற்றம் நடைபெற்றதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்பெண் புகார் அளித்துள்ளார். ஸ்வதந்தர் குமார் தற்போது பசுமை தீர்ப்பாய விரைவு நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார்.
நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முன்னாள் மற்றும் தற்போதைய நீதிபதிகள் மீதான பாலி்யல் குற்றங்களை விசாரிக்க தனி அமைப்பு ஏற்படுத்த ஒப்புதல் அளித்தனர்.
மேலும் வழக்கறிஞர்கள் ஃபாலி நரிமான் மற்றம் கே.கே.வேணுகோபால் ஆகியோர் இந்த பாலியல் வழக்குகளை விசாரிப்பார்கள் எனவும் தெரிவித்தது.
அத்துடன், நீதிபதிகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனி அமைப்பு ஏற்படுத்துவது குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மாஜி நீதிபதிகள் மீது கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளை ஏற்றுக் கொண்டு அவர்களை சுப்ரீம் கோர்ட் கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்திருந்தது.
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதிகளான ஏ.கே.கங்குலி மற்றும் ஸ்வதந்தர் குமார் ஆகியோர் மீது பயிற்சி பெண் வழக்கறிஞர்கள் பாலி்யல் புகார் அளித்துள்ளனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து சர்ச்சைகள் மற்றும் நெருக்கடிகள் காரணமாக நீதிபதி கங்குலி, மேற்குவங்க மனிதஉரிமைகள் கழக தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் கோல்கட்டாவைச் சேர்ந்த மற்றொரு பெண் வழக்கறிஞர் தேசிய பசுமை தீர்ப்பாய தலைவரான முன்னாள் நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீது கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் புகார் அளித்துள்ளார்.
தமது புகாரை தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு அனுப்பிய அப்பெண், நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீது கோர்ட் ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஸ்வந்தர்குமார் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த போது 2011ல் இந்த குற்றம் நடைபெற்றதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்பெண் புகார் அளித்துள்ளார். ஸ்வதந்தர் குமார் தற்போது பசுமை தீர்ப்பாய விரைவு நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார்.
நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முன்னாள் மற்றும் தற்போதைய நீதிபதிகள் மீதான பாலி்யல் குற்றங்களை விசாரிக்க தனி அமைப்பு ஏற்படுத்த ஒப்புதல் அளித்தனர்.
மேலும் வழக்கறிஞர்கள் ஃபாலி நரிமான் மற்றம் கே.கே.வேணுகோபால் ஆகியோர் இந்த பாலியல் வழக்குகளை விசாரிப்பார்கள் எனவும் தெரிவித்தது.
அத்துடன், நீதிபதிகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனி அமைப்பு ஏற்படுத்துவது குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.