கும்மிடிப்பூண்டி: ஆந்திராவில் நேற்று, 'பந்த்' அனுசரிக்கப்பட்டதால், ஆந்திராவுக்குள் செல்லும் தமிழக அரசு பேருந்துகள், தமிழக எல்லையோடு திரும்பின.
ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் முழுவதும், அனைத்து கட்சி சார்பில், 'பந்த்' அனுசரிக்கப்பட்டது. இதனால், நெல்லூர், நாயுடுபேட்டை, சூளூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால், சென்னை, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பணிமனையில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்படும், தமிழக அரசு பேருந்துகள், ஆந்திர மாநிலத்திற்குள் நேற்று இயக்கப்படவில்லை. தமிழக எல்லை முடிவான, ஆரம்பாக்கம் பகுதி வரை சென்று திரும்பின.
இந்த, 'பந்த்'தால் காளஹஸ்தி, நெல்லூர், நாயுடுபேட், நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்தூர், திருப்பதி போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல், பயணிகள் அவதிப்பட்டனர்.
ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் முழுவதும், அனைத்து கட்சி சார்பில், 'பந்த்' அனுசரிக்கப்பட்டது. இதனால், நெல்லூர், நாயுடுபேட்டை, சூளூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால், சென்னை, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பணிமனையில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்படும், தமிழக அரசு பேருந்துகள், ஆந்திர மாநிலத்திற்குள் நேற்று இயக்கப்படவில்லை. தமிழக எல்லை முடிவான, ஆரம்பாக்கம் பகுதி வரை சென்று திரும்பின.
இந்த, 'பந்த்'தால் காளஹஸ்தி, நெல்லூர், நாயுடுபேட், நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்தூர், திருப்பதி போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல், பயணிகள் அவதிப்பட்டனர்.