சென்னை: தேமுதிகவை விட்டு வெளியேறிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விருதை நாளை முதல்வர் ஜெயலலிதா வழங்க உள்ளார்.
தலைவர்கள் பெயரில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் யூசிக்கு வழங்கப்பட்டது. திருவள்ளுவர் தினமான ஜனவரி 15-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதை வழங்கினார்.
இது தவிர தந்தை பெரியார் விருது, பேரறிஞர் அண்ணா விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருதுகளை பெறுவோர் பெயர்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு நாளை அண்ணா விருது வழங்குகிறார் ஜெயலலிதா
பெரியார் விருது சுலோசனா சம்பத்துக்கும், அண்ணா விருது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கார் விருது பேராயர் பிரகாஷ்க்கும், காமராஜர் விருது அய்யாறு வாண்டையாருக்கும் வழங்கப்பட உள்ளது.
பாரதியார் விருதை முனைவர் கு.ஞான சம்பந்தன், பாரதிதாசன் விருதை முனைவர் ராதா செல்வலப்பன், திரு.வி.க. விருதை ஜெ.அசோகமித்ரன், கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை முனைவர் வ.ஜெயதேவன் ஆகியோரும் பெறுகிறார்கள்.
தமிழக அரசின் விருதுகளை வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை நடைபெறுகிறது. இந்த விருதுகளை பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட 8 பேருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்.
தலைவர்கள் பெயரில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் யூசிக்கு வழங்கப்பட்டது. திருவள்ளுவர் தினமான ஜனவரி 15-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதை வழங்கினார்.
இது தவிர தந்தை பெரியார் விருது, பேரறிஞர் அண்ணா விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருதுகளை பெறுவோர் பெயர்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு நாளை அண்ணா விருது வழங்குகிறார் ஜெயலலிதா
பெரியார் விருது சுலோசனா சம்பத்துக்கும், அண்ணா விருது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கார் விருது பேராயர் பிரகாஷ்க்கும், காமராஜர் விருது அய்யாறு வாண்டையாருக்கும் வழங்கப்பட உள்ளது.
பாரதியார் விருதை முனைவர் கு.ஞான சம்பந்தன், பாரதிதாசன் விருதை முனைவர் ராதா செல்வலப்பன், திரு.வி.க. விருதை ஜெ.அசோகமித்ரன், கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை முனைவர் வ.ஜெயதேவன் ஆகியோரும் பெறுகிறார்கள்.
தமிழக அரசின் விருதுகளை வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை நடைபெறுகிறது. இந்த விருதுகளை பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட 8 பேருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்.