RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

என் படங்களில் நடிகர் நடிகைகளை சிரமப்படுத்த மாட்டேன் - ஜெயம் ராஜா

From: 'விஸ்தாரம்'

POST 16/6/2014, 6:50 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இனி என் படங்களில் நடிகர் நடிகைகளை அதிக சிரமப்படுத்தமாட்டேன், என்றார் இயக்குநர் ஜெயம் ராஜா.

இயக்குனர் ஜெயம் ராஜா முதல் முறையாக நடித்திருக்கும் படம் என்ன சத்தம் இந்த நேரம்.

இந்தப் படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த, ஒரே மாதிரி முகத் தோற்றம் கொண்ட 4 பெண் குழந்தைகள் நடித்திருக்கின்றனர். இந்த குழந்தைகளின் அப்பாவாக ஜெயம் ராஜாவும், அம்மாவாக காதல் மன்னன் புகழ் மானுவும் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குரு ரமேஷ்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.

ஜெயம் ராஜா பேசுகையில், "என் தந்தை திரைத்துறையில் நீண்ட வருடங்களாக இருப்பவர்.

நான் விரும்பியிருந்தால் எப்போதோ இயக்குநராகியிருப்பேன். ஆனால் எனக்கு அதில் ஆர்வமில்லை. ஆனால் இப்போது இந்தப் படத்தில் நான் நடிக்கக் காரணம், இந்த நான்கு தெய்வங்கள்... குழந்தைகள்தான். இவர்களுக்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இயக்குனராக பல படங்களை இயக்கியிருந்தாலும் நடிப்புக்கு நான் புதுசுதான். எனவே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஜெயம் ரவி சொல்லுவான், 'எங்களையெல்லாம் என்ன பாடு படுத்தினே... இப்ப தெரியுதா?' என்று. இனிமேல் நான் இயக்கும் படங்களில் நடிகர், நடிகைகளுக்கு அதிகம் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்," என்றார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT