காஞ்சிபுரம்: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. காஞ்சிபுரம், கோவையில் பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அதிமுகவினர் இன்று பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் புதிய ரயில்வே சாலையில் சென்ற அரசு பஸ்சை 20-க்கும் மேற்பட்டோர் திடீரென வழி மறித்தனர். அவர்கள் பயணிகளை இறக்கி விட்டு பேருந்துக்கு தீ வைத்தனர். உடனே பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. போலீசார் வருவதை தெரிந்ததும் பேருந்துக்கு தீ வைத்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதேபோல் கோவை காந்திபுரத்திலும் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனையடுத்து பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆங்காங்கே பேருந்துகள் எரிக்கப்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதேபோல் சென்னையை அடுத்த அம்பத்தூரிலும் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
தமிழகம் முழுவதும் பல முக்கிய நகரங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்றவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து அதிமுகவினர் இன்று பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் புதிய ரயில்வே சாலையில் சென்ற அரசு பஸ்சை 20-க்கும் மேற்பட்டோர் திடீரென வழி மறித்தனர். அவர்கள் பயணிகளை இறக்கி விட்டு பேருந்துக்கு தீ வைத்தனர். உடனே பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. போலீசார் வருவதை தெரிந்ததும் பேருந்துக்கு தீ வைத்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதேபோல் கோவை காந்திபுரத்திலும் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனையடுத்து பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆங்காங்கே பேருந்துகள் எரிக்கப்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதேபோல் சென்னையை அடுத்த அம்பத்தூரிலும் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
தமிழகம் முழுவதும் பல முக்கிய நகரங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்றவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.