RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

இட ஒதுக்கீடு பிரச்சினை: ஜன-21.ல் போராட்டம்: திமுக

From: 'விஸ்தாரம்'

POST 15/1/2014, 11:32 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகள், அலுவலர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை கண்டித்து ஜனவரி 21-ல் திமுக போராட்டம் நடத்த உள்ளது.

தென் சென்னையில், திமுக மாணவர் அணியினர் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகள், அலுவலர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது சமூக நீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சி என்று சில தினங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதி சாடியிருந்தார். மேலும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில், திமுக தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது என்று அவர் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 21-ஆம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT