RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

'இத்துப்போன' நடிகரை வெச்சு கேப்டனை விமர்சித்த திமுக: பொதுக்குழுவில் கொந்தளித்த பிரேமலதா

From: 'விஸ்தாரம்'

POST 16/1/2014, 2:21 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: 'இத்துப்போன' நடிகரை வெச்சு கேப்டனை திமுக விமர்சித்ததை இன்னமும் மறக்கவில்லை என்று தேமுதிக பொதுக்குழுவில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.

அவர் பேசியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியில் எங்கள் திருமண மண்டபத்தை இடித்தனர். வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இத்துபோன நடிகர் ஒருவரை வைத்து கேப்டனுக்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேச வைக்க முடியுமோ அவ்வளவு கொச்சையாக பேச வைத்தனர். அதை தங்களின் டிவியில் நேரடியாக ஒளிபரப்பும் செய்து அசிங்கப்படுத்தினர். ஜெயலலிதாவும், இப்போது வழக்கு மேல் வழக்கு போட்டு வருகிறார்.

கட்சியை விட்டு எட்டு பேர் போனாலும் 80 லட்சம் தொண்டர்கள் இருக்கின்றனர். எட்டு கோடி தமிழக மக்கள் மனதில் தே.மு.தி.க. உள்ளது என்றார்.

வடிவேலுவைத்தான்..

கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவாக நகைச்சுவை நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அவர் பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் தவறாமல் விஜயகாந்தை விமர்சித்து வந்தார். அவரது பேச்சை சன் நியூஸ் தொலைக்காட்சி சிறப்பு தொகுப்புகளாக வெளியிட்டது. இதை மனதில் வைத்துதான் பொதுக்குழுவில் 'இத்துப்போன நடிகரை வைத்து விமர்சித்த திமுக' என்று பேசியிருக்கிறார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT