சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள எச்சரிக்கை பொதுவானது. எனக்கானது அல்ல என்று தென் மண்டல திமுக அமைப்பாளர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவர் சந்திப்பதற்கு முன்பு ஒரு பேட்டியின்போது இப்படிக் கூறியுள்ளார் அழகிரி. மதுரை திமுகவில் நடந்து வந்த சலசலப்புகளால் அதிருப்தியுள்ள திமுக தலைமை மதுரை மாவட்ட திமுக குழுவை கூண்டோடு நீக்கியது. புதிய குழுவை அறிவித்தது.
மேலும் மு.க.அழகிரியாகவே இருந்தாலும் கட்சிக் கட்டுப்பாட்டை நீக்கினால் நீக்கத் தயங்க மாட்டேன் என்றும் திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் அழகிரி. இந்த சந்திப்பின்போது பேசிக் கொள்ளப்பட்டவை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. அழகிரியும் செய்தியாளர்களிடம் பேசவில்லை.
இந்த நிலையில் இந்த சந்திப்புக்கு முன்பு அழகிரி அளித்துள்ள ஒரு பேட்டியில், திமுக தலைவர் கருணாநிதியின் எச்சரிக்கை அறிக்கை எனக்காக விடப்பட்டது அல்ல. தலைவர் பொதுவாக அறிவித்து இருக்கிறார்.
கட்சியில் உள்ள அனைவருக்கும் இதை பொதுவாக கூறியுள்ளார். அவ்வளவுதான், அதை எனக்காகத்தான். என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் திமுக தலைவரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, அப்பாவும் மகனும் எப்படி சந்திக்காமல் இருப்பார்கள்? என்று பதில் கேள்வி கேட்டார் அழகிரி சிரித்தபடி.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவர் சந்திப்பதற்கு முன்பு ஒரு பேட்டியின்போது இப்படிக் கூறியுள்ளார் அழகிரி. மதுரை திமுகவில் நடந்து வந்த சலசலப்புகளால் அதிருப்தியுள்ள திமுக தலைமை மதுரை மாவட்ட திமுக குழுவை கூண்டோடு நீக்கியது. புதிய குழுவை அறிவித்தது.
மேலும் மு.க.அழகிரியாகவே இருந்தாலும் கட்சிக் கட்டுப்பாட்டை நீக்கினால் நீக்கத் தயங்க மாட்டேன் என்றும் திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் அழகிரி. இந்த சந்திப்பின்போது பேசிக் கொள்ளப்பட்டவை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. அழகிரியும் செய்தியாளர்களிடம் பேசவில்லை.
இந்த நிலையில் இந்த சந்திப்புக்கு முன்பு அழகிரி அளித்துள்ள ஒரு பேட்டியில், திமுக தலைவர் கருணாநிதியின் எச்சரிக்கை அறிக்கை எனக்காக விடப்பட்டது அல்ல. தலைவர் பொதுவாக அறிவித்து இருக்கிறார்.
கட்சியில் உள்ள அனைவருக்கும் இதை பொதுவாக கூறியுள்ளார். அவ்வளவுதான், அதை எனக்காகத்தான். என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் திமுக தலைவரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, அப்பாவும் மகனும் எப்படி சந்திக்காமல் இருப்பார்கள்? என்று பதில் கேள்வி கேட்டார் அழகிரி சிரித்தபடி.