RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்... சென்னையில் 36.36 லட்சம் வாக்காளர்கள்

From: 'விஸ்தாரம்'

POST 110/1/2014, 4:37 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்க வசதியாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வருகிற லோக்சபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 3 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதற்குள் அடங்கிய 16 சட்டசபைத் தொகுதிகளிலும் மொத்தம் 36 லட்சத்து 36 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண்கள் 18 லட்சத்து 13 ஆயிரத்து 76 பேர் ஆவர். பெண்களின் எண்ண்ணிக்கை 18 லட்சத்து 21 ஆயிரத்து 401 ஆகும். ஆண்களை விட பெண்களே அதிகம்.

சென்னயைில் உள்ள திருநங்கையர் வாக்காளர்கள் 662 பேர் ஆவர்.

சென்னையில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 199 பேர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 28 லட்சத்து 29 ஆயிரத்து 251 வாக்காளர்கள் உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 61 ஆயிரத்து 27 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 11,75,955 பேர் ஆவர். பெண் வாக்காளர்கள் 11,85,006 பேர் ஆவர். ஆண்களை விட பெண்கள் அதிகம்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 13 ஆயிரத்து 569 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 11,52,944 பேர், பெண்கள் 11,60,613 பேர். இங்கும் பெண்களே அதிகம்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 20,33,188 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்களார்கள் 10,56,021 பேர், பெண்கள் 10,27,480 பேர். திருநங்கை 87 பேர். திருச்சி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT