RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

பாலாவுக்கு அன்புத்தொல்லை கொடுத்து வரும் பூஜா!

From: 'விஸ்தாரம்'

POST 110/1/2014, 5:24 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பார்வை இல்லாத பெண்ணாக நடித்து தனது நடிப்பாற்றலை நிரூபித்தவர் பூஜா. அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தபோதும் அந்த படம்தான் பூஜாவுக்குள் இருக்கிற திறமையான நடிகையை வெளிச்சம் போட்டு காட்டியது. ஆனால், அதையடுத்து நான் கடவுளுக்கு இணையான வேடங்களாக பூஜா எதிர்பார்த்ததால் படவாய்ப்புகள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதனால், மீண்டும் தனது தாய்மொழியான சிங்கள படங்களில் நடித்து வந்த பூஜாவை, விடியும் முன் என்ற படத்தில் விலைமாது வேடத்தில் நடிக்க அழைத்தபோது கதையில் தனக்கிருந்த முக்கியத்துவத்தை உணர்ந்து மறுபடியும் கோலிவுட்டுக்கு வந்தார். அப்படி அந்த படத்தில் நடித்த நேரம் பார்த்து, மீண்டும் டைரக்டர் பாலா பரதேசியில் நடிக்க பூஜாவை அழைத்தார். அதோடு, அருள்நிதி நடித்த தகராறு படத்திலும் நடிக்க அழைத்தனர்.

ஆனால், விடியும்முன் படத்திற்கு கொடுத்த தேதியிலேயே, இரண்டு படங்களுக்கும் கால்சீட் கேட்டதால், அந்த ஒரு படத்துக்காக இரண்டு படங்களை இழந்தார் பூஜா. ஆனால், அப்படி பூஜா நடித்த விடியும் முன் படம் தோல்வியடைந்து அவரை ஏமாற்றிவிட்டது., அதனால் மீண்டும் நல்ல படங்களுக்காக கல்லெறிந்து வருகிறார் நடிகை.

குறிப்பாக, இரண்டாவது முறையாக தனக்கு அழைப்பு விடுத்த பரதேசி பாலாவிற்கு அடிக்கடி போன் போட்டு, அடுத்து இயக்கும் படத்தில் தனக்கு சான்ஸ் தருமாறு அன்புத்தொல்லை கொடுத்து வருகிறாராம் பூஜா. அதேபோல், ஆர்யா உள்ளிட்ட சில அபிமான ஹீரோக்களுக்கும் போன் செய்து தன்னை ஆதரிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT