சென்னை: இலங்கை அமைச்சர் ரஜிதாவின் கருத்து மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார் பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராமின் வெண்கல சிலையை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். சிலையை திறந்து வைத்து ஜி.கே.வாசன் பேசியபோது, " இந்திய தேசிய விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற ஜெகஜீவன்ராம், மத்திய ஆட்சியிலும் துணை பிரதமராக இருந்து நாட்டுக்கு பெருமை சேர்ந்தார். அவரது சிலையை திறந்து வைப்பது எனக்கு பெருமை. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜவகர்லால் தேசிய நகர்புற திட்டத்துக்கு 45 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 300 கோடியும் மழை நீர் வடிகால் அமைக்க 1,420 கோடி ரூபாயும், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ. 700 கோடியும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
குடிசைகளை அகற்றி கான்கிரீட் வீடுகள் கட்ட மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அதிக நிதி வழங்கியது. தொழிலாளர் தேர்வு நிதி ஆணையத்துக்கு ரூ. 666.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலித் மாணவர்களுக்கு ரூ.1,278 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுக 3-ம் பிரிவு ஊழியர்களுக்கு ரூ.120 கோடி நிலுவை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 7 ஆயிரத்து 143 பேர் பயன் பெறுவார்கள். 1.1.2002 முதல் கணக்கிட்டு வழங்கப்படும். ஒரு ஊழியருக்கு பாக்கித் தொகையையும் சேர்த்து ரு. 3 லட்சத்து 25 ஆயிரம் கிடைக்கும்.
இலங்கை அமைச்சர் ரஜிதாவின் கருத்து மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தை மூலம் மீனவர்கள் பிரச்னையை தீர்க்க முடியாது என கூறுவது மீனவர் நலனுக்கு எதிரானது. வரும் 20ஆம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்பே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்", இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை தண்டையார் பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராமின் வெண்கல சிலையை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். சிலையை திறந்து வைத்து ஜி.கே.வாசன் பேசியபோது, " இந்திய தேசிய விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற ஜெகஜீவன்ராம், மத்திய ஆட்சியிலும் துணை பிரதமராக இருந்து நாட்டுக்கு பெருமை சேர்ந்தார். அவரது சிலையை திறந்து வைப்பது எனக்கு பெருமை. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜவகர்லால் தேசிய நகர்புற திட்டத்துக்கு 45 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 300 கோடியும் மழை நீர் வடிகால் அமைக்க 1,420 கோடி ரூபாயும், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ. 700 கோடியும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
குடிசைகளை அகற்றி கான்கிரீட் வீடுகள் கட்ட மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அதிக நிதி வழங்கியது. தொழிலாளர் தேர்வு நிதி ஆணையத்துக்கு ரூ. 666.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலித் மாணவர்களுக்கு ரூ.1,278 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுக 3-ம் பிரிவு ஊழியர்களுக்கு ரூ.120 கோடி நிலுவை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 7 ஆயிரத்து 143 பேர் பயன் பெறுவார்கள். 1.1.2002 முதல் கணக்கிட்டு வழங்கப்படும். ஒரு ஊழியருக்கு பாக்கித் தொகையையும் சேர்த்து ரு. 3 லட்சத்து 25 ஆயிரம் கிடைக்கும்.
இலங்கை அமைச்சர் ரஜிதாவின் கருத்து மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தை மூலம் மீனவர்கள் பிரச்னையை தீர்க்க முடியாது என கூறுவது மீனவர் நலனுக்கு எதிரானது. வரும் 20ஆம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்பே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்", இவ்வாறு அவர் கூறியுள்ளார்.