RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

இலங்கை சிறையில் இருந்து ஒரே நாளில் 163 தமிழக மீனவர்கள் விடுதலை

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 5:49 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 163 தமிழக மீனவர்கள் இன்று ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் 275 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு சிறைகளில் அடைப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

மேலும் இருநாட்டு மீனவர்கள் இடையேயான மீன்பிடிப்பு பேச்சுவார்த்தை இம்மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் பக்ருதீன், தமிழக மீனவர்கள் 20 பேர் முதல்கட்டமாக விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

பின்னர் மாலையில் மேலும் 143 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஒரே நாளில் 163 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராமங்கள் நிம்மதியடைந்துள்ளன.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT