ஜெய், நஸ்ரியா நடிக்கும் திருமணம் எனும் நிக்காஹ் படத்தை அனிஸ் டைரக்ட் செய்து வருகிறார். படத்தின் டைட்டிலே பிரச்னையை கிளப்பி விடுமோ என்று பயந்திருக்கிறார்கள். படத்தில் நடிக்கும் நஸ்ரியாவும், டைரக்ட் செய்யும் அனிஸ்சும் முஸ்லிம்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன் படம் பற்றி பேட்டியளித்த நஸ்ரியா "நான் ஆச்சாரமான முஸ்லிம் குடும்பத்து பொண்ணு. நான் முஸ்லிம்களுக்கு எதிரான படத்தில் நடிப்பேனா?" என்று கேட்டிருந்தார். இப்போது படம் முடிந்து விட்ட நிலையிலும் விரைவில் ரிலீசாக இருப்பதாலும், இனி யாரும் காப்பி அடிக்க முடியாது என்பதாலும் படத்தின் கதையை கசியவிட்டு விட்டார்கள். படத்தோட கதை இதுதான்...
விஜயராகவாச்சாரி என்ற பெயர் கொண்ட ஜெய், ஆச்சாரமான அய்யங்கார் குடும்பத்து பையன். ஐ.டி துறையில் வேலை செய்கிறான். வீட்டில் அவனுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்கள்.
திருமணத்தில் விருப்பம் இல்லாத ஜெய் கோவையில் உள்ள தன் நண்பன் வீட்டுக்கு செல்கிறான். அது ஒரு பண்டிகை காலம் என்பதால் ரெயில் டிக்கெட் கிடைக்கவில்லை. பிளாக்கில் டிக்கெட் வாங்கி பயணம் செய்கிறான்.
பிளாக்கில் வாங்கின டிக்கெட்டில் அபுக்கர் என்ற முஸ்லிம் பெயர் இருக்கிறது. அவனுக்கு பக்கத்து சீட்டில் பயணம் செய்கிறார் முஸ்லிம் பெண்ணான ஆயிஷா. அவள் அழகில் மயங்கும் ஜெய், தன்னை முஸ்லிம் என்று பொய் சொல்லி பழக ஆரம்பிக்கிறார்.
ஜெய்யை நஸ்ரியாவுக்கு பிடித்துப்போக இருவரும் பழக ஆரம்பிக்கிறார். இந்த ரெயில் சினேகிதம் காதலாகிறது. ஜெய் படாதபாடுபட்டு முஸ்லிமாக நடித்து நஸ்ரியாவை காதலிக்கிறார்.
காதல் கைகூடி வரும் நேரத்தில்தான் தெரிய வருகிறது நஸ்ரியாவும் ஆச்சாரமான அய்யங்கார் குடும்பத்து பெண் என்று. அவரும் அன்றைக்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கி பயணம் செய்தவர். அவர் வாங்கிய டிக்கெட்டில் ஆயிஷா என்று இருந்ததால் டிக்கெட் பரிசோதகரை ஏமாற்ற முஸ்லிம் வேடம் போட்டிருக்கிறார்.
காதலின் சக்தியால் நஸ்ரியா முஸ்லிமாக மாற தயாராகிறார், ஜெய்யும் முஸ்லிமாக தயாராகிறார். கடைசியில் உண்மை தெரிந்து நிக்காஹ்வாக நடக்க வேண்டிய வாழ்க்கை ஒப்பந்தம் திருமணமாக நடந்தேறுகிறது. இதுதான் கதை. கதையை ரொம்ப லவ் ஃபீலோடு, காமெடியும் கலந்து தருகிறார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன் படம் பற்றி பேட்டியளித்த நஸ்ரியா "நான் ஆச்சாரமான முஸ்லிம் குடும்பத்து பொண்ணு. நான் முஸ்லிம்களுக்கு எதிரான படத்தில் நடிப்பேனா?" என்று கேட்டிருந்தார். இப்போது படம் முடிந்து விட்ட நிலையிலும் விரைவில் ரிலீசாக இருப்பதாலும், இனி யாரும் காப்பி அடிக்க முடியாது என்பதாலும் படத்தின் கதையை கசியவிட்டு விட்டார்கள். படத்தோட கதை இதுதான்...
விஜயராகவாச்சாரி என்ற பெயர் கொண்ட ஜெய், ஆச்சாரமான அய்யங்கார் குடும்பத்து பையன். ஐ.டி துறையில் வேலை செய்கிறான். வீட்டில் அவனுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார்கள்.
திருமணத்தில் விருப்பம் இல்லாத ஜெய் கோவையில் உள்ள தன் நண்பன் வீட்டுக்கு செல்கிறான். அது ஒரு பண்டிகை காலம் என்பதால் ரெயில் டிக்கெட் கிடைக்கவில்லை. பிளாக்கில் டிக்கெட் வாங்கி பயணம் செய்கிறான்.
பிளாக்கில் வாங்கின டிக்கெட்டில் அபுக்கர் என்ற முஸ்லிம் பெயர் இருக்கிறது. அவனுக்கு பக்கத்து சீட்டில் பயணம் செய்கிறார் முஸ்லிம் பெண்ணான ஆயிஷா. அவள் அழகில் மயங்கும் ஜெய், தன்னை முஸ்லிம் என்று பொய் சொல்லி பழக ஆரம்பிக்கிறார்.
ஜெய்யை நஸ்ரியாவுக்கு பிடித்துப்போக இருவரும் பழக ஆரம்பிக்கிறார். இந்த ரெயில் சினேகிதம் காதலாகிறது. ஜெய் படாதபாடுபட்டு முஸ்லிமாக நடித்து நஸ்ரியாவை காதலிக்கிறார்.
காதல் கைகூடி வரும் நேரத்தில்தான் தெரிய வருகிறது நஸ்ரியாவும் ஆச்சாரமான அய்யங்கார் குடும்பத்து பெண் என்று. அவரும் அன்றைக்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கி பயணம் செய்தவர். அவர் வாங்கிய டிக்கெட்டில் ஆயிஷா என்று இருந்ததால் டிக்கெட் பரிசோதகரை ஏமாற்ற முஸ்லிம் வேடம் போட்டிருக்கிறார்.
காதலின் சக்தியால் நஸ்ரியா முஸ்லிமாக மாற தயாராகிறார், ஜெய்யும் முஸ்லிமாக தயாராகிறார். கடைசியில் உண்மை தெரிந்து நிக்காஹ்வாக நடக்க வேண்டிய வாழ்க்கை ஒப்பந்தம் திருமணமாக நடந்தேறுகிறது. இதுதான் கதை. கதையை ரொம்ப லவ் ஃபீலோடு, காமெடியும் கலந்து தருகிறார்கள்.