RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

பெய்ஜிங்கில் பொங்கல் பெருவிழா கொண்டாட்டம்!

From: 'விஸ்தாரம்'

POST 115/1/2014, 9:32 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
பெய்ஜிங்: சீனாவில் 2014ம் ஆண்டு பொங்கல் விழாவையும், பெய்ஜிங் தமிழ் சங்கமத்தின் ஓராண்டு நிறைவு விழாவையும் பெய்ஜிங் வாழ் தமிழர்கள் பெய்ஜிங்கிலுள்ள இந்தியன் கிச்சன் உணவகத்தில் கொண்டாடினர்.

முதலில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். சீன வானொலி தமிழ்ப் பிரிவிலிருந்து தலைவர் கலைமகளும், தமிழ் இணையதள பொறுப்பாளர் மதியழகனும் கலந்து கொண்டானர்.

பொறியியலாளர் சி.பி.மோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொங்கல் விழா தொடர்பான வினாடி வினாவை நோக்கியா நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த், அபர்னா ஸ்ரீகாந்த் தம்பதி நடத்தினர். உலகளவில் பொங்கல் கொண்டாட்டம் என்ற தலைப்பில் பல்லூடக வடிவிலான கருத்துரையை பொறியிலாளர் லட்சுமணன் வழங்கினார்.

கடந்த ஓராண்டு நடைபெற்ற ஐந்து பெய்ஜிங் தமிழ் சங்கமத்தின் கூட்டங்கள், அதன் செயல்பாடுகள், பொறுப்புக் குழுக்கள், கூட்டம் நடத்தும்முறை, எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றை தொகுத்து சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் பணிபுரியும் மரிய மைக்கிள் ஆண்டு அறிக்கையாக வழங்கினார்.

பொங்கல் பானையில் பொங்கலிட்டு, பொங்கல் பொங்கியபோது, பொங்கலோ, பொங்கல் என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பி மகிழ்ந்த இதில் பங்கேற்ற தமிழர்கள் அனைவரும், பொங்கல் பானையை சுற்றி வந்து கும்மியடித்து மகிழ்ச்சிக் கடலில் திழைத்தனர்.

இறுதியில் அறுசுவை விருந்து உண்டு மகிந்த அனைவரும், அடுத்தாக தமிழ்ப் புத்தாண்டை ஏப்ரல் திங்களில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.

பெய்ஜிங்கிலுள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடும் மேடையாகவுள்ள பெய்ஜிங் தமிழ் சங்கமம், தமிழ் சீனப் பண்பாட்டு பரிமாற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு 13ம் நாள் பெய்ஜிங்கில் முதல்முறையாக பொங்கல் கொண்டாடிய தமிழர்கள் பெய்ஜிங் தமிழ் சங்கமத்தை துவக்கியது குறிப்பிடத்தக்கது.

- பெய்ஜிங்கிலிருந்து மரிய மைக்கிள்



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT