புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் யாரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என அக்கட்சியின் தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம் ஆத்மி கட்சியையும் அவர்களின் அரசியலையும் தாக்கி விமர்சித்து வரும் வினோத் குமார் பென்னிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதற்காக சீட் தருமாறு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வினோத்குமார் பென்னி பிரச்னை செய்து வரும் வேளையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வினோத்குமார் பென்னி டிசம்பர் மாதம் முதல் அமைச்சராக இருந்து வருகிறார்; அவருக்கு அமைச்சர் பதவி வழங்க நான் மறுத்தேன்; இருப்பினும் கட்சியினரின் வேண்டுகோளின்படி அவருக்கு சீட் அளித்தேன்; இப்போது லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் தர வேண்டும் என பிரச்னை செய்து வருகிறார்; ஆனால் தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் யாருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் வழங்க கூடாது என கட்சி முடிவு செய்துள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக கெஜ்ரிவால் அரசு மீது அதிருப்தி அடைந்திருப்பதாகவும், அவர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் வினோத்குமார் பென்னி குற்றம்சாட்டி இருந்தார். கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறி வருவதால் அவர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக அவருக்கு கட்சியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கெஜ்ரிவால் தமது கொள்கையில் இருந்து மாறுபட்டு நடப்பதாகவும், இது தொடர்பாக தான் கட்சியின் மற்றொரு தலைவர் குமார் விஸ்வாசை சந்தித்து பேசி வருவதாகவும் தெரிவித்த பென்னி, அவர்கள் இருவரும் கட்சியில் அமைச்சராக இருக்கவோ முதல்வராகவோ விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளவர், நாட்டுக்காக சேவை செய்வதையே விரும்புவதாகவும் அவர் கூறி உள்ளார்.
ஜன் லோக்பால் போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்த பென்னி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தவர். தற்போது ஆம் ஆத்மி கட்சியின் 9 பேர் கொண்ட அரசியல் விவகார குழு உறுப்பினராகவும் பென்னி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதற்காக சீட் தருமாறு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வினோத்குமார் பென்னி பிரச்னை செய்து வரும் வேளையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வினோத்குமார் பென்னி டிசம்பர் மாதம் முதல் அமைச்சராக இருந்து வருகிறார்; அவருக்கு அமைச்சர் பதவி வழங்க நான் மறுத்தேன்; இருப்பினும் கட்சியினரின் வேண்டுகோளின்படி அவருக்கு சீட் அளித்தேன்; இப்போது லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் தர வேண்டும் என பிரச்னை செய்து வருகிறார்; ஆனால் தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் யாருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் வழங்க கூடாது என கட்சி முடிவு செய்துள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக கெஜ்ரிவால் அரசு மீது அதிருப்தி அடைந்திருப்பதாகவும், அவர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் வினோத்குமார் பென்னி குற்றம்சாட்டி இருந்தார். கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறி வருவதால் அவர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக அவருக்கு கட்சியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கெஜ்ரிவால் தமது கொள்கையில் இருந்து மாறுபட்டு நடப்பதாகவும், இது தொடர்பாக தான் கட்சியின் மற்றொரு தலைவர் குமார் விஸ்வாசை சந்தித்து பேசி வருவதாகவும் தெரிவித்த பென்னி, அவர்கள் இருவரும் கட்சியில் அமைச்சராக இருக்கவோ முதல்வராகவோ விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளவர், நாட்டுக்காக சேவை செய்வதையே விரும்புவதாகவும் அவர் கூறி உள்ளார்.
ஜன் லோக்பால் போராட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்த பென்னி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தவர். தற்போது ஆம் ஆத்மி கட்சியின் 9 பேர் கொண்ட அரசியல் விவகார குழு உறுப்பினராகவும் பென்னி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.