சென்னை: பொங்கலுக்கு ரிலீஸான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தங்க வேட்டை நடத்தி வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின.
இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் வசூல் செய்து வருகின்றன. இது 2014ம் ஆண்டின் சிறப்பான துவக்கமாக அமைந்துள்ளது என்று சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீரமும் சரி, ஜில்லாவும் சரி ரிலீஸான முதல் வார இறுதி நாட்களில் மொத்தமாக ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் திரிநாத் தெரிவித்துள்ளார்.
ஜில்லா படத்தில் மோகன்லால் நடித்திருப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் கேரளாவில் சுமார் 200 தியேட்டர்களில் ரிலீஸானது. தமிழ் படம் ஒன்றுக்கு வெளிமாநிலத்தில் இவ்வளவு வரவேற்பு கிடைத்ததை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்று திரிநாத் கூறினார்.
வீரம் மற்றும் ஜில்லா படங்களின் தயாரிப்பாளர்கள் வசூல் விவரங்களை துள்ளியமாக தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். பொங்கல் விடுமுறை இரண்டு படங்களுக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்றார் திரிநாத்.
அஜீத் குமார் கிராமத்து கெட்டப்பில் வந்தது பாக்ஸ் ஆபீஸில் படம் கிளிக் ஆகிவிட்டது. படம் ரிலீஸான முதல் வார இறுதியில் தமிழகத்தில் மட்டும் ரூ.15.24 கோடியை வசூலித்தது என்றார் திரிநாத்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பாக்ஸ் ஆபீஸில் அஜீத், விஜய் மற்றும் சூர்யா போன்ற ஸ்டார்களால் தான் வசூலை அள்ள முடியும் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
படம் ரிலீஸாகி அடுத்த வார இறுதியும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதல் வார இறுதியைப் போன்று இந்த வார இறுதி நாட்களிலும் வீரம் மற்றும் ஜில்லா தனது வசூல் வேட்டையை சிறப்பாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின.
இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் வசூல் செய்து வருகின்றன. இது 2014ம் ஆண்டின் சிறப்பான துவக்கமாக அமைந்துள்ளது என்று சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீரமும் சரி, ஜில்லாவும் சரி ரிலீஸான முதல் வார இறுதி நாட்களில் மொத்தமாக ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் திரிநாத் தெரிவித்துள்ளார்.
ஜில்லா படத்தில் மோகன்லால் நடித்திருப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் கேரளாவில் சுமார் 200 தியேட்டர்களில் ரிலீஸானது. தமிழ் படம் ஒன்றுக்கு வெளிமாநிலத்தில் இவ்வளவு வரவேற்பு கிடைத்ததை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்று திரிநாத் கூறினார்.
வீரம் மற்றும் ஜில்லா படங்களின் தயாரிப்பாளர்கள் வசூல் விவரங்களை துள்ளியமாக தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். பொங்கல் விடுமுறை இரண்டு படங்களுக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்றார் திரிநாத்.
அஜீத் குமார் கிராமத்து கெட்டப்பில் வந்தது பாக்ஸ் ஆபீஸில் படம் கிளிக் ஆகிவிட்டது. படம் ரிலீஸான முதல் வார இறுதியில் தமிழகத்தில் மட்டும் ரூ.15.24 கோடியை வசூலித்தது என்றார் திரிநாத்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பாக்ஸ் ஆபீஸில் அஜீத், விஜய் மற்றும் சூர்யா போன்ற ஸ்டார்களால் தான் வசூலை அள்ள முடியும் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
படம் ரிலீஸாகி அடுத்த வார இறுதியும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதல் வார இறுதியைப் போன்று இந்த வார இறுதி நாட்களிலும் வீரம் மற்றும் ஜில்லா தனது வசூல் வேட்டையை சிறப்பாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.