RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

மும்பை நடிகை வீட்டில் 25,000 பலான சிடி குவியல்...சிக்கலில் கவர்ச்சி நடிகை!

From: 'விஸ்தாரம்'

POST 122/1/2014, 5:26 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மும்பை: மும்பையைச் சேர்ந்த அதி பயங்கர கவர்ச்சி நடிகையான மிஸ்டி முகர்ஜி ஆபாச சிடி விற்றதாக வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் அவரது தந்தை மற்றும் சகோதரனை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் நாங்கள் ஆபாச சிடியெல்லாம் விற்பதில்லை என்றும், எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த நான்கு வேலைக்காரப் பெண்கள் செய்த மோசடிதான் இது என்றும் மிஸ்டி கூறுகிறார்.

தனது வேலைக்காரர்கள்தான் வேண்டும் என்றே மாட்டி விட்டு விட்டதாகவும், அந்த சிடிக்களை எங்கிருந்து திருடிக் கொண்டு வந்து தங்களை மாட்டி விட்டு விட்டதாகவும் புலம்புகிறார் மிஸ்டி.

தற்போது இந்த நான்கு வேலைக்காரர்களும் மாயமாகி விட்டார்கள். அவர்களையும் போலீஸார் தற்போது தேடி வருகிறார்களாம்.

மிஸ்டியின் மும்பை ஓஷிவாராவில் உள்ள மீரா டவர் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 25,000 ஆபாச சிடிக்களை சமீபத்தில் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்தனையும் படு ஆபாசமான படங்கள் அடங்கிய வீடியோ சிடிக்கள் ஆகும். இதுதொடர்பாக மிஸ்டியின் அப்பா மற்றும் சகோதரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆனால் இந்த சிடிக்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று மிஸ்டி மறுத்துள்ளார். தாங்கள் ஆபாச சிடிக்களை விற்பதில்லை என்றும் அவர் புலம்புகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என் வீட்டில் வேலை பார்த்து வந்த நான்கு வேலைக்காரப் பெண்கள்தான் இதற்குக் காரணம். அவர்கள்தான் இந்த சிடிக்களைப் போட்டு எங்களை மாட்டி விட்டுள்ளனர் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நானும் எனது குடும்பத்தினரும் கோவாவுக்கு புத்தாண்டு கொண்டாடப் போயிருந்தபோது அந்த வேலைக்காரப் பெண்கள் இந்த சதி வேலையைச் செய்துள்ளனர். அவர்கள் பணத்தையும், நகையையும் கூட திருடிச் சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சமாகும்.

நாங்கள் கோவா போய் விட்டு வீடு திரும்பியபோது வீடு முழுவதும் எங்களது பொருட்கள் சிதறிக் கிடந்தன. லாக்கரை பார்த்தபோது அதில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடு போயிருந்தது. எங்களது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் எதுவும் பதிவாகவில்லை. என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக நான் ஓஷிவாரா போலீஸில் புகார் கூறச் சென்றேன். ஆனால் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தினர். ஆபாச சிடிக்கள் இருந்ததாக கூறி வழக்குப் போட்டு விட்டனர். இது அனைத்துமே சதி வேலையாகும் என்று குமுறினார் மிஸ்டி.

இதற்கிடையே, நடிகை வீட்டில் சிக்கிய ஆபாச சிடிக்கள் அனைத்தும் அவரது சகோதரன் சேகரித்து வைத்திருந்த சிடிக்களாம். ஆனால் தான் போட்டுப் பார்க்க மட்டுமே அதை சேகரித்ததாகவும், விற்கவில்லை என்றும் அவர் போலீஸில் தெரிவித்துள்ளார். கடந்த 20 வருடமாக இப்படி சிடிக்களை கலெக்ட் செய்து வருகிறாராம் அந்த சகோதரன்....



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT