சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்பாடு அதிகரிப்பால், சாயல்குடி பகுதி மீனவர்களுக்கு, கடந்த இரு வாரங்களாக மீன்பாடு இல்லை. வேறு வழியின்றி யானை முள்ளி சங்குகள் சதையை விற்று, பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
வெளி மாவட்டம் உட்பட உள்ளூர் மீனவர்கள், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இரு வாரங்களாக ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர், மாரியூர், வாலிநோக்கம், முந்தல் பகுதி கடலில் மீன்பாடு இல்லை.மீன்பிடிக்க செல்லும் போது, தினமும் 3 கிலோ, யானை முள்ளி சங்குகளை சேகரிக்கின்றனர்.
அதிலிருந்து சென்ட், பவுடர் தயாரிப்பதற்காகவும், சதையை கிலோ 200 ரூபாய்க்கு வியாபாரிகளிடம் விற்கின்றனர். இவை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்த சங்குகளும் இம்மாதம் மட்டுமே கிடைக்கும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதை தவிர்க்க, இரட்டைமடி வலை பயன்பாட்டை நிரந்தரமாக தடுக்க வேண்டும்.
வெளி மாவட்டம் உட்பட உள்ளூர் மீனவர்கள், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இரு வாரங்களாக ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர், மாரியூர், வாலிநோக்கம், முந்தல் பகுதி கடலில் மீன்பாடு இல்லை.மீன்பிடிக்க செல்லும் போது, தினமும் 3 கிலோ, யானை முள்ளி சங்குகளை சேகரிக்கின்றனர்.
அதிலிருந்து சென்ட், பவுடர் தயாரிப்பதற்காகவும், சதையை கிலோ 200 ரூபாய்க்கு வியாபாரிகளிடம் விற்கின்றனர். இவை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்த சங்குகளும் இம்மாதம் மட்டுமே கிடைக்கும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதை தவிர்க்க, இரட்டைமடி வலை பயன்பாட்டை நிரந்தரமாக தடுக்க வேண்டும்.