டெல்லி: முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமையை முழுமையாக நிலைநாட்ட முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கூறியுள்ளதாவது:
"கேரள சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜெமிலா பிரகாசம் என்பவர் கூறுகையில், "சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அணைகள் பாதுகாப்புக் கமிட்டி கூட்டத்தில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக் கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட கேரள அதிகாரிகள் அதை எதிர்க்கவில்லையே?" என்று கேட்டிருக்கிறார்.
தமிழக அணைகள்
இதற்கு விளக்கமளித்த முதல்வர் உம்மன்சாண்டி "முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கேரளாவுக்கு சொந்தம்
ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது" என்று தெரிவித்திருக்கிறார்.
தேசியப் பதிவேட்டில்
மத்திய நீர்வள ஆணையத்தின் கூட்டம் 2013 டிசம்பர் 27ஆம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஜுன் 2014 வரை உள்ள விபரங்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரிய அணைகள் பற்றிய தேசியப் பதிவேடு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவேட்டில் முல்லைப் பெரியாறு, திருணக்கடவு, பெருவாளிப்பள்ளம், பரம்பிகுளம் ஆகிய நான்கு அணைகளும் கேரள அணைகள் பட்டியலில் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன என்றும்; தமிழக அணைகளின் பட்டியலில் இவை சேர்க்கப்பட வில்லை என்றும் செய்தி வெளிவந்துள்ளது.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கூறியுள்ளதாவது:
"கேரள சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜெமிலா பிரகாசம் என்பவர் கூறுகையில், "சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அணைகள் பாதுகாப்புக் கமிட்டி கூட்டத்தில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக் கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட கேரள அதிகாரிகள் அதை எதிர்க்கவில்லையே?" என்று கேட்டிருக்கிறார்.
தமிழக அணைகள்
இதற்கு விளக்கமளித்த முதல்வர் உம்மன்சாண்டி "முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கேரளாவுக்கு சொந்தம்
ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது" என்று தெரிவித்திருக்கிறார்.
தேசியப் பதிவேட்டில்
மத்திய நீர்வள ஆணையத்தின் கூட்டம் 2013 டிசம்பர் 27ஆம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஜுன் 2014 வரை உள்ள விபரங்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரிய அணைகள் பற்றிய தேசியப் பதிவேடு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவேட்டில் முல்லைப் பெரியாறு, திருணக்கடவு, பெருவாளிப்பள்ளம், பரம்பிகுளம் ஆகிய நான்கு அணைகளும் கேரள அணைகள் பட்டியலில் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன என்றும்; தமிழக அணைகளின் பட்டியலில் இவை சேர்க்கப்பட வில்லை என்றும் செய்தி வெளிவந்துள்ளது.