RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு செய்தியை தவிர்த்த ஜெயா பிளஸ், கேப்டன் டிவி

From: 'விஸ்தாரம்'

POST 128/9/2014, 5:36 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: ஜெயா பிளஸ் செய்தி தொலைக்காட்சியில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த செய்திகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிடுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு தொலைக்காட்சிகள் இந்த செய்தியை உயிருடன் கொடுத்து வருகின்றன. ஆனால் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் அதிமுக நிர்வாகிகளின் குடும்பத்தார் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்தது, தமிழக வளர்ச்சிக்கு அவர் நிதி ஒதுக்கியது, அம்மா சிமெண்ட் திட்டத்திற்காக முதல்வருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பது குறித்த செய்திகள் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல், மோடியின் அமெரிக்க பயணம், அஸ்ஸாம் வெள்ளம், ஆசிய போட்டிகள் குறித்தும் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. அந்த தொலைக்காட்சியில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான கேப்டன் டிவியில் டெலிஷாப்பிங் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT