பொங்கலுக்கு வெளியாகும் வீரம், ஜில்லா படங்கள் இரண்டுமே நன்றாக ஓட வேண்டும். விஜய், அஜீத் ரசிகர்கள் மோதிக் கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஜீவா கேட்டுக் கொண்டார்.
இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கிய ஜீவா பின்னர் பேசுகையில், "இந்த பொங்கலுக்கு அண்ணன் விஜய் நடித்த ஜில்லா படமும், தல அஜீத் நடித்த ஜில்லாவும் வெளியாகின்றன.
இந்த இரண்டு படங்களுமே நல்லா ஓடணும்.. தமிழ் சினிமாவுக்கு மகிழ்ச்சியை தரணும். சமீபத்தில் கூட பிரியாணியும் என்றென்றும் புன்னகையும் ஒரே நாளில் வெளியாகி, வெற்றி பெற்றன. அந்த மாதிரி ஜில்லாவும் வீரமும் வெற்றி பெறணும்.
இந்த நேரத்துல நான் சொல்லி விரும்பறதெல்லாம், இந்த இரு படங்களின் நாயகர்களுடைய ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும். இரு படங்களையும் நன்றாக ஓட வைக்க வேண்டும் என்பதுதான். ஆங்காங்கே விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்னு செய்திகள் வருது. அதெல்லாம் இல்லாம பாத்துக்கங்க, ப்ளீஸ்," என்றார்.
இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கிய ஜீவா பின்னர் பேசுகையில், "இந்த பொங்கலுக்கு அண்ணன் விஜய் நடித்த ஜில்லா படமும், தல அஜீத் நடித்த ஜில்லாவும் வெளியாகின்றன.
இந்த இரண்டு படங்களுமே நல்லா ஓடணும்.. தமிழ் சினிமாவுக்கு மகிழ்ச்சியை தரணும். சமீபத்தில் கூட பிரியாணியும் என்றென்றும் புன்னகையும் ஒரே நாளில் வெளியாகி, வெற்றி பெற்றன. அந்த மாதிரி ஜில்லாவும் வீரமும் வெற்றி பெறணும்.
இந்த நேரத்துல நான் சொல்லி விரும்பறதெல்லாம், இந்த இரு படங்களின் நாயகர்களுடைய ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும். இரு படங்களையும் நன்றாக ஓட வைக்க வேண்டும் என்பதுதான். ஆங்காங்கே விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்னு செய்திகள் வருது. அதெல்லாம் இல்லாம பாத்துக்கங்க, ப்ளீஸ்," என்றார்.