RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

பிறரை வெறுப்பது உண்மையான மதம் அல்ல: பிரதமர் பேச்சு

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 10:38 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
புதுடில்லி:''மற்றவர்களை வெறுத்து ஒதுக்குவதும், மனம் புண்படும்படியாக பேசுவதும், உண்மையான மதம் அல்ல; மதம் என்பது, அந்த அடிப்படையில் அமைந்ததல்ல. அனைவரின் நம்பிக்கைக்கும், சகிப்பு தன்மைக்கும், பரஸ்பரம் மதிப்பு அளிப்பதே உண்மையான மதம்.

இதைத் தான், சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

நிறைவு விழா:

சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும், கடந்த ஓர் ஆண்டாக, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் நிறைவு விழா, மத்திய கலாசார அமைச்சகம் சார்பில், டில்லியில், நேற்று நடந்தது.

இதில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

தற்போது, நாடு முழுவதும், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவை, சிறப்பாக கொண்டாடி வருகிறோம். ஆனால், மக்களுக்கு, அவர் போதித்த கருத்துக்களை பின்பற்றாமல், அவரின் பிறந்த நாளை கொண்டாடுவதில், எந்த அர்த்தமும் இல்லை.எந்த ஒரு மதமும், மற்றவர்களை வெறுத்து ஒதுக்கச் சொல்லவில்லை.

இதைத் தான், சுவாமி விவேகானந்தர், 'மற்றவர்களை புண்படுத்துவது, உண்மையான மதம் அல்ல' என்றார்.நம் நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்த உலகத்துக்கே பொருந்தக் கூடிய, பல்வேறு போதனைகளை அவர் கூறியுள்ளார். அனைவரின் நம்பிக்கைக்கும், சகிப்பு தன்மைக்கும், பரஸ்பரம் மதிப்பு அளிப்பதே, உண்மையான மதம்.'பிரிவினைவாதிகள், மத வெறியர்கள், மூட நம்பிக்கை உடையவர்கள், இந்த பூமியில் உள்ளனர். இவர்கள் தான், இந்த பூமியில், வன்முறைக்கு காரணமானவர்கள்.

ஒட்டு மொத்த நாகரிகத்தையும், சமுதாயத்தையும் சீர்குலைப்பது, இவர்கள் தான்' என, சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். அவரின் கருத்துக்களை, போதனைகளை, நாம் பின்பற்றுவதுடன், உலகம் முழுவதற்கும், அந்த கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும். அவர், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சொந்தக்காரர்.

அவருக்கு உலகம் முழுவதும், சீடர்கள் உள்ளனர்.மதத்தின் மீது உண்மையான பற்று வைத்துள்ளவர்கள், எந்தவித மோதலிலும், ஈடுபட மாட்டார்கள் என்றும், அனைத்து மதங்களின் ஆன்மா ஒன்று தான் என்றும், சுவாமிஜி கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கள், என்னை, மிகவும் கவர்ந்தவை.இவ்வாறு, மன்மோகன் சிங் பேசினார்.

சுவாமிக்கு மரியாதை:

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, காங்., தலைவர் சோனியா பேசியதாவது:

மத வெறி தான், இந்த பிராந்தியத்துக்கு பேராபத்தை ஏற்படுத்துகிறது. சுவாமி விவேகானந்தர், மத வெறியை எதிர்த்து போராடும்படி, போதித்தார்.

இளைஞர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்பதே, சுவாமிஜியின் விருப்பம். அவரின் விருப்பத்தையும், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே, சுவாமி விவேகானந்தருக்கு, நாம் அளிக்கும் மரியாதையாக இருக்கும்.இவ்வாறு, சோனியா பேசினார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT