RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

From: 'விஸ்தாரம்'

POST 14/1/2014, 2:40 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை : நேற்று நள்ளிரவு முதல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா தெரிவித்துள்ளதாவது:பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. இதன் மூலம், ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர்.ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மேலும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த மத்திய அரசும் செய்திராத அளவுக்கு பெட்ரோல், டீசல், காஸ் விலையை மத்தியில் ஆளும் காங்., கூட்டணி அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல். மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்.எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலை நிர்ணய அதிகாரத்தை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT