மும்பை:
மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் விளையாடும் மும்பை அணியில், வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் மீண்டும் இடம் பிடித்தார்.
உள்ளூர் தொடர்களில் ஒன்றான, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகள், வரும் ஜன., 8–12ம் தேதிகளில் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கும் காலிறுதியில், மும்பை, மகராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான மும்பை அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
இதில், சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், மீண்டும் சேர்க்கப்பட்டார். இவர், கேப்டனாக நியமிக்கப்பட்டார். காயத்தில் இருந்து மீண்ட அபிஷேக் நாயர் தேர்வு செய்யப்பட்டார்.
மும்பை அணியில் மொத்தம் ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டன. ஹிகன் ஷா, சித்தேஷ் லத், பிரவின் தம்ப், துரைசாமி சுப்ரமணியன், பல்விந்தர் சிங் சாந்து (ஜூனியர்) ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ஜாகிர் கான், அபிஷேக் நாயர், வினித் இந்துல்கர், நிகில் பாட்டீல் (ஜூனியர்), சர்வேஷ் தாம்லே ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
வாசிர் ஜாபர், ஆதித்யா தாரே, சூர்யகுமார் யாதவ், இக்பால் அப்துல்லா உள்ளிட்டோர் அணியில் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
திவாரி வாய்ப்பு:
கோல்கட்டாவில் நடக்கவுள்ள மற்றொரு காலிறுதியில், பெங்கால், ரயில்வேஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான பெங்கால் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், முழங்கால் காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட மனோஜ் திவாரி சேர்க்கப்பட்டார்.
அணியில் 17வது வீரராக சேர்க்கப்பட்டுள்ள இவர், வரும் ஜன., 6ம் தேதி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.சி.,) உடற்தகுதியை நிரூபிக்க உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விரிதிமன் சகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உ.பி., அணிக்கு எதிரான போட்டியில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கேற்காத துவக்க வீரர் அரிந்தம் தாஸ் மீண்டும் இடம் பிடித்துள்ளார். கேப்டனாக லட்சுமி ரத்தன் சுக்லா தொடர்கிறார்.
மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் விளையாடும் மும்பை அணியில், வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் மீண்டும் இடம் பிடித்தார்.
உள்ளூர் தொடர்களில் ஒன்றான, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகள், வரும் ஜன., 8–12ம் தேதிகளில் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கும் காலிறுதியில், மும்பை, மகராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான மும்பை அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
இதில், சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், மீண்டும் சேர்க்கப்பட்டார். இவர், கேப்டனாக நியமிக்கப்பட்டார். காயத்தில் இருந்து மீண்ட அபிஷேக் நாயர் தேர்வு செய்யப்பட்டார்.
மும்பை அணியில் மொத்தம் ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டன. ஹிகன் ஷா, சித்தேஷ் லத், பிரவின் தம்ப், துரைசாமி சுப்ரமணியன், பல்விந்தர் சிங் சாந்து (ஜூனியர்) ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக ஜாகிர் கான், அபிஷேக் நாயர், வினித் இந்துல்கர், நிகில் பாட்டீல் (ஜூனியர்), சர்வேஷ் தாம்லே ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
வாசிர் ஜாபர், ஆதித்யா தாரே, சூர்யகுமார் யாதவ், இக்பால் அப்துல்லா உள்ளிட்டோர் அணியில் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
திவாரி வாய்ப்பு:
கோல்கட்டாவில் நடக்கவுள்ள மற்றொரு காலிறுதியில், பெங்கால், ரயில்வேஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான பெங்கால் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், முழங்கால் காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட மனோஜ் திவாரி சேர்க்கப்பட்டார்.
அணியில் 17வது வீரராக சேர்க்கப்பட்டுள்ள இவர், வரும் ஜன., 6ம் தேதி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.சி.,) உடற்தகுதியை நிரூபிக்க உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விரிதிமன் சகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உ.பி., அணிக்கு எதிரான போட்டியில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கேற்காத துவக்க வீரர் அரிந்தம் தாஸ் மீண்டும் இடம் பிடித்துள்ளார். கேப்டனாக லட்சுமி ரத்தன் சுக்லா தொடர்கிறார்.