டெல்லி: மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் பெட்ரோநெட் நிறுவனத்தின் ஆலையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பமொய்லி கூறியதாவது:
நாடு முழுவதும் 90 சதவீத சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9ல் இருந்து 12ஆக அதிகரிக்கும் திட்டமில்லை
மானியம் இல்லாத சிலிண்டர்களை 10 சதவீதத்தினர் மட்டுமே வாங்குவதாகவும் மொய்லி கூறினார்.
சமீபத்திய 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, அதனைத் தொடர்ந்து விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துமாறு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதாகவும், அதனை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையிலேயே வீரப்ப மொய்லி இவ்வாறு கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் பெட்ரோநெட் நிறுவனத்தின் ஆலையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பமொய்லி கூறியதாவது:
நாடு முழுவதும் 90 சதவீத சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9ல் இருந்து 12ஆக அதிகரிக்கும் திட்டமில்லை
மானியம் இல்லாத சிலிண்டர்களை 10 சதவீதத்தினர் மட்டுமே வாங்குவதாகவும் மொய்லி கூறினார்.
சமீபத்திய 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, அதனைத் தொடர்ந்து விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துமாறு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதாகவும், அதனை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையிலேயே வீரப்ப மொய்லி இவ்வாறு கூறியுள்ளார்.