சென்னை: தனித்தே போட்டியிடுவது என்ற கொள்கையை, கடந்த சட்டசபைத் தேர்தலோடு காற்றில் பறக்க விட்ட தேமுதிக, வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டு சேர்ந்து போட்டியிடலாம் என்பது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இதை கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தின்போது கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
இன்று நடந்த கூட்டத்தின்போது விஜயகாந்த் பேசுகையில், மத்திய அரசை எதற்கெடுத்தாலும் தமிழக அரசு குறை கூறக்கூடாது. சட்டசபையில் தேமுதிக உறுப்பினர்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். எல்.கே.சுதீஷ், சந்திரகுமார், ஜாகிர், உமாநாத், யுவராஜ், மோகன்ராஜ் ஆகியோர் குழுவில் உள்ளனர் என்றார் விஜயகாந்த்.
இவர்களில் சுதீஷ் விஜயகாந்த்தின் மைத்துனர் ஆவார். சந்திரகுமார், சட்டசபை தேமுதிக கொறடா ஆவார்.
இதை கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தின்போது கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
இன்று நடந்த கூட்டத்தின்போது விஜயகாந்த் பேசுகையில், மத்திய அரசை எதற்கெடுத்தாலும் தமிழக அரசு குறை கூறக்கூடாது. சட்டசபையில் தேமுதிக உறுப்பினர்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். எல்.கே.சுதீஷ், சந்திரகுமார், ஜாகிர், உமாநாத், யுவராஜ், மோகன்ராஜ் ஆகியோர் குழுவில் உள்ளனர் என்றார் விஜயகாந்த்.
இவர்களில் சுதீஷ் விஜயகாந்த்தின் மைத்துனர் ஆவார். சந்திரகுமார், சட்டசபை தேமுதிக கொறடா ஆவார்.