RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

7 வது எடிசன் விருது விழா- மலேசிய கவர்னர் பங்கேற்கிறார்!

From: 'விஸ்தாரம்'

POST 111/1/2014, 3:40 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: அடுத்த மாதம் நடக்கும் ஏழாவது எடிசன் விருது விழாவில் மலேசிய கவர்னர் பங்கேற்கிறார்.

கடந்த 6 ஆண்டுகளாக உலக தமிழர்கள் இணையம் மூலமாகவும், வாக்கு சீட்டு மூலமாகவும் தமிழ்திரை உலகினரை தேர்ந்தெடுத்து எடிசன் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

7 வது எடிசன் விருது விழா- மலேசிய கவர்னர் பங்கேற்கிறார்! 11-malaysia-governor-to-grace-7th-edison-awards-600

அதன் தொடர்ச்சியாக 2013 ஜனவரி முதல் 2013 டிசம்பர் 27 வரை வெளிவந்த திரை படங்களின் தேர்வு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதில் 30 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருது பெறுவோற்வோர்க்கான தேர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை அம்பிகா எம்பையர் ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி பங்கேற்றார்.

தமிழ் திரைப்பட பின்னனி பாடகர் வேல்முருகன், நடிகை சஞ்சனா சிங், கனா படத் தயாரிப்பாளர் தமீம், எடிசன் விருது நிறுவனர் ஜெ செல்வகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதில் சிறந்த நடிகர் நடிகைகள், இயக்குநர், கேமராமேன், இசை அமைப்பாளர் போன்றோர் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்வு பட்டியலில் இன்று தொடங்கி பிப்ரவரி 5 ம் தேதி வரை ஆன்லைனில் வாக்களிக்க முடியும்.

அவ் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு பிப்ரவரி 16 ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4 மணி முதல் 8.30 வரை நடைபெற உள்ள எடிசன் விருதுகள் விழாவில் விருதுகள் வழங்கப்படும். இவ்விழாவில் திரைதுறை சார்ந்த நடன கலைஞர்கள் மற்றும் மலேசிய, சிங்கப்பூர், கனடா நாட்டு நடனகலைஞர்கள் நடனமாடுகிறார்கள்.

இவ்விழாவிற்கு மலேசிய நாட்டில் உள்ள மலாக்கா மாநில கவர்னர் கலந்து கொண்டு விருதுகள் வழங்க உள்ளார். மேலும் இவர் மலேசிய நாட்டு மலாய்காரராய் இருந்தாலும் நம் நாட்டு தமிழ் திரைப்படங்களை மிகவும் நேசிக்க கூடியவர், நாம் அனைவரும் போற்ற கூடிய புரட்சிதலைவர் எம்ஜிஆர் நடிப்பின் ஈர்ப்பால் இன்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக செல்லும் போது மேடையில் தமிழ் பாடல்களை பாடக் கூடியவர்.

இந்திய சினிமாவையும், தமிழ் சினிமாவையும் அதிகம் நேசித்ததால் அந்நாட்டில் வழங்கப்படும் டத்தோ பட்டத்தை நடிகர் ஷாருக்கானுக்கும், ராதாரவிக்கும் வழங்கி இந்திய சினிமாவிற்கு ஒரு அங்கிகாரம் அளித்தவர் என்பது பெருமைக்குரியது.

இவ்விழா சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள கான்சர்ட் ஹாலில் நடைபெற உள்ளது.

வாசகர்கள், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுக்க www.edisonawards.in இணையம் மூலம் வாக்களிக்கலாம்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT