டேராடூன்: டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் ஆட் சேர்ப்பில் நிகழ்ந்த மிகப் பெரும் ஊழல் முறைகேடு தொடர்பாக 3 ராணுவ உயர் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் இந்திய ராணுவ அகாடமி உள்ளது. இதில் C மற்றும் D பிரிவில் வீரர்களை சேர்ப்பதற்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது என்பது புகார்.
டேராடூன் அகாடமி ஆட்சேர்ப்பில் ஊழல்: 3 ராணுவ உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், டேராடூன் ராணுவ அகாடமியில் சேர்பவர்களுக்கு, ராணுவ லெப். கர்னல்களான அகிலேஷ் மிஸ்ரா, ஜெகதீஷ் பிஷ்நோய், அம்பரீஷ் திவாரி ஆகிய 3 ராணுவ உயரதிகாரிகள் போலி சான்றிதழ்களை வழங்கியிருப்பதுடன், அவர்களின் விடைத்தாள்களுக்குப் பதிலாக வேறு விடைத்தாள்களை மாற்றி முறைகேடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து 3 அதிகாரிகள் மீதும் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூவரும் விரைவில் சிபிஐயால் கைது செய்யப்பட இருக்கின்றனர்.
உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் இந்திய ராணுவ அகாடமி உள்ளது. இதில் C மற்றும் D பிரிவில் வீரர்களை சேர்ப்பதற்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது என்பது புகார்.
டேராடூன் அகாடமி ஆட்சேர்ப்பில் ஊழல்: 3 ராணுவ உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், டேராடூன் ராணுவ அகாடமியில் சேர்பவர்களுக்கு, ராணுவ லெப். கர்னல்களான அகிலேஷ் மிஸ்ரா, ஜெகதீஷ் பிஷ்நோய், அம்பரீஷ் திவாரி ஆகிய 3 ராணுவ உயரதிகாரிகள் போலி சான்றிதழ்களை வழங்கியிருப்பதுடன், அவர்களின் விடைத்தாள்களுக்குப் பதிலாக வேறு விடைத்தாள்களை மாற்றி முறைகேடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து 3 அதிகாரிகள் மீதும் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூவரும் விரைவில் சிபிஐயால் கைது செய்யப்பட இருக்கின்றனர்.