டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறையக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்த வார இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.
எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகியவை 2 வாரத்திற்கு ஒரு முறை கூடி பெட்ரோல் விலை குறித்து ஆய்வு செய்கின்றன. அந்த ஆய்வின் அடிப்படையில் பெட்ரோல் விலை உயர்த்தவோ, குறைக்கவோ செய்யப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல நிலையில் உள்ளதாலும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.5 முதல் ரூ.2 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாம்.
இது குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 3ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 96 பைசாவும், 5ம் தேதி லிட்டருக்கு ரூ. 1.79ம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகியவை 2 வாரத்திற்கு ஒரு முறை கூடி பெட்ரோல் விலை குறித்து ஆய்வு செய்கின்றன. அந்த ஆய்வின் அடிப்படையில் பெட்ரோல் விலை உயர்த்தவோ, குறைக்கவோ செய்யப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல நிலையில் உள்ளதாலும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.5 முதல் ரூ.2 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாம்.
இது குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 3ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 96 பைசாவும், 5ம் தேதி லிட்டருக்கு ரூ. 1.79ம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.